search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருத்த வேண்டும்"

    • ஊஞ்சலூர் பகுதியில் தொடர்ந்து மர்ம விலங்கு புகுந்து ஆடுகள், கோழிகளை வேட்டையாடி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என ெபாது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • எனவே மின்விளக்கு எரிய விட வேண்டும். நாய்கள் நடமாட்டம் உள்ள முக்கியமான 3 இடங்களில் நாய்களை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டன.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே ஊஞ்சலூர் பகுதியில் தொடர்ந்து மர்ம விலங்கு புகுந்து ஆடுகள், கோழிகளை வேட்டையாடி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என ெபாது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் மர்ம விலங்கு நடமாட்டம் தடுப்பு நடவடிக்கைக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் கொடுமுடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது.

    இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த், கரட்டாம்பாளையம் கால்நடை மருத்துவர் ெஜயலட்சுமி, கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், கொடுமுடி பேரூராட்சி உதவியாளர்கள் செந்தில், பாஸ்கரன், வெங்கம்பூர் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, தீயணைப்புத்துறை சரவணன், வனக்காவலர்கள் கீர்த்தனா, துரைராஜ் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்த பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் மற்றும் மர்ம விலங்கை பிடிக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆடு வளர்ப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

    50 ஆடுகளுக்கு மேல் கால்நடைகள் வளர்ப்ப வர்கள் ஆட்டுபட்டியில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தி கொள்ள வேண்டும்.

    ஆடுகள் கட்ட ப்பட்டுள்ள இடங்களில் மின்விளக்கு எரிய விட்டால் வனவிலங்குகள் வராது.எனவே மின்விளக்கு எரிய விட வேண்டும். நாய்கள் நடமாட்டம் உள்ள முக்கியமான 3 இடங்களில் நாய்களை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டன.

    • கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.

    நெகமம்:

    நெகமம் பகுதியில் கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அடிக்கடி வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிபவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குற்றச்சம்பவங்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காண்காணித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது நெகமத்தில் நான்கு ரோடு சந்திப்பு, வடசித்தூர், நெகமம் போலீஸ் நிலையம் உள்பட 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    மேலும் காட்டம்பட்டி பிரிவு அருகே நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.இந்த கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    திருப்பூர்- பொள்ளாச்சி மெயின் ரோடு, உடுமலை - திருப்பூர் ரோட்டில் நாளுக்கு நாள் அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதால் இந்த மெயின் ரோட்டில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் இரு சக்கர வாகனத்தில் 3 பேர், 4 பேர் பயணம் செய்வது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து நெகமம் போலீசார் ஒருவர் கூறியதாவது:-காவல் துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் நெகமம் மற்றும் வடசித்தூர் பகுதியில் 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    மேலும் கூடுதலாக ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், செங்குட்டைப்பாளையம், பனப்பட்டி, மெட்டுவாவி, கக்கடவு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். இதை அப்பகுதி மக்கள் முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போது கிராமங்களில் திருட்டு சம்பவங்கள், தடுக்க ஏதுவாக இருக்கும். இதை கிராம பகுதி மக்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×