search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் சிறைபிடிப்பு"

    கோவை ஆத்துப்பாலம் அருகே தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து பொதுமக்கள் லாரியை சிறைப்பிடித்தனர். #ContainerLorry
    கோவை ஆத்துப்பாலம் அருகே சாலையில் தாறுமாறாக கண்டெய்னர் லாரி சென்றது.  அப்போது லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டதால் பொதுமக்கள் அதிகமாக அந்த இடத்தில் கூடினர்.

    அப்போது லாரியை முற்றுகையிட்ட பொது மக்கள் கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைக்க முற்பட்டனர். இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையின்ர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களை களைந்து செல்லுமாறு அறிவித்தனர்.  

    பொது மக்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் வந்து லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரிடம் விசரணை செய்து வருகின்றனர்.  அப்போது லாரியின் ஓட்டுனர் லாரியில் டீ தூள் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையல் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இடத்திலேயே பூட்டை திறக்க வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இங்கு இதனை திறப்பது சட்டப்பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்த அதிகாரிகள் லாரியை ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் பொது மக்கள் லாரியை சூழ்ந்து கொண்டு அவ்விடம் விட்டு செல்ல மறுத்துவரும் நிலையில் கோவை ஆத்துப்பாலம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உதவி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    திருவாரூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் எடுத்து செல்லப்பட்ட எந்திரங்கள், லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவாரூர்:

    தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த ஒரு ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டது.

    இதனால் சாலை கடுமையாக சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் விபத்து அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    சாலையை சீரமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு முதற் கட்டமாக சேதமடைந்த சாலையை சீரமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சாலை சீரமைப்பு பணிகளை தொடங்கியது. இதற்காக திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதிகளில் எந்திரங்கள், லாரிகளை நிறுத்தி வைத்திருந்தது.

    இந்நிலையில் சாலையை சீரமைக்காமல் ஒப்பந்த நிறுவனம் வாகனங்களை வேறு பணிகளுக்காக எடுத்து செல்ல முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை சீரமைத்தால் மட்டுமே வாகனங்களை செல்ல அனுமதிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி பர பரப்பாக காணப்பட்டது.
    ×