search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேய் வீடு"

    • ராமநாதபுரத்தில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியை நகரசபை தலைவர் திறந்து வைக்கிறார்
    • அனைவரும் விரும்பி கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கல்வி பயின்ற ஸ்வார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் 7 வருட நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரம்மாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட் காட்சி இன்று தொடங்கு கிறது.

    நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்று மாலை 6 மணிக்கு பொருட்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.

    ஏராளமான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இப்பொருட்காட்சியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் ஜூன் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    4 D ஷோ,பேய் வீடு,பன் சிட்டி, ஸ்டால்கள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் ஒரே இடத்தில் அமைந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள

    இப்பொருட்காட்சிக்கான ஏற்பாடுகளை பொருட் காட்சி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூகஆர்வலர்கள் தேனி போலீசில் புகார் அளித்தனர்.
    • விஷம் குடித்தும் தற்கொலை செய்வோர்களின் வீடுகளுக்கு யாரும் குடிவருவதில்லை.

    தேனி:

    தேனியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் ஜெய்முருகேஷ்(52). இவர் வீடு வாடகைக்கு, ஒத்தி, வீட்டடி மனைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தேனியில் பல்வேறு பகுதிகளில் வாடகைக்கு வீடு, ஒத்திக்கு வீடு, ஒரு மணிநேரத்தில் அமைத்து தரப்படும். இதற்கு சர்வீஸ் கட்டணம் கிடையாது. மேலும் பேய்வீடுகளுக்கு கட்டணம் முற்றிலும் இலவசம் என பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் தேனி போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் போஸ்டர்களை அகற்ற உத்தரவிட்டனர். அதன்படி ஜெய்முருகேஷ் போஸ்டர்களை கிழித்து அகற்றினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

    தூக்குபோட்டும், விஷம் குடித்தும் தற்கொலை செய்வோர்களின் வீடுகளுக்கு யாரும் குடிவருவதில்லை. இதனால் எங்களை போன்றவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களை கவர இதுபோன்று வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினேன் என்றார்.

    ×