என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தேனியில் பேய் வீடுகளுக்கு கமிஷன் இலவசம் போஸ்டரால் பரபரப்பு
- சமூகஆர்வலர்கள் தேனி போலீசில் புகார் அளித்தனர்.
- விஷம் குடித்தும் தற்கொலை செய்வோர்களின் வீடுகளுக்கு யாரும் குடிவருவதில்லை.
தேனி:
தேனியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் ஜெய்முருகேஷ்(52). இவர் வீடு வாடகைக்கு, ஒத்தி, வீட்டடி மனைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தேனியில் பல்வேறு பகுதிகளில் வாடகைக்கு வீடு, ஒத்திக்கு வீடு, ஒரு மணிநேரத்தில் அமைத்து தரப்படும். இதற்கு சர்வீஸ் கட்டணம் கிடையாது. மேலும் பேய்வீடுகளுக்கு கட்டணம் முற்றிலும் இலவசம் என பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் தேனி போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் போஸ்டர்களை அகற்ற உத்தரவிட்டனர். அதன்படி ஜெய்முருகேஷ் போஸ்டர்களை கிழித்து அகற்றினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
தூக்குபோட்டும், விஷம் குடித்தும் தற்கொலை செய்வோர்களின் வீடுகளுக்கு யாரும் குடிவருவதில்லை. இதனால் எங்களை போன்றவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களை கவர இதுபோன்று வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினேன் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்