search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்மிண்டன் போட்டி"

    • இதில் 26 நாடுகளை சேர்ந்த 202 வீரர்கள் விளையாடினர்.
    • ஒற்றையர் ஆண்கள் பிரிவில் விளையாடிய பிரேம்குமார் வெண்கல பதக்கம் வென்றார்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் பிரேம்குமார். பேட்மிண்டன் வீரரான இவர், கடந்த 2-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச தரவரிசை பாரா ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் பங்கேற்றார்.

    இதில் 26 நாடுகளை சேர்ந்த 202 வீரர்கள் விளையாடினர். இதில் ஒற்றையர் ஆண்கள் பிரிவில் விளையாடிய பிரேம்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் இரட்டையர் ஆண்கள் பிரிவில் தினேஷ்ராஜய்யாவுடன் இணைந்து, மற்றொரு வெண்கல பதக்கத்தையும் வென்றார். அவரை அணுமின்நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் பாராட்டினர்.

    • 8 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.
    • வின்னர் கோப்பையை முதலாவதாக மும்பை-அஜந்தா அணியினர் பெற்றனர்.

    மாமல்லபுரம்:

    தேசிய அளவிலான அணுசக்திதுறை ஊழியர்களின் ஆண்-பெண் "அட்டாமிக் பேட்மிண்டன்" போட்டி கல்பாக்கம் நகரியத்தின் நெஸ்கோ உள்விளையாட்டு அரங்கத்தில் 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 8 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.

    வின்னர் கோப்பையை முதலாவதாக மும்பை-அஜந்தா அணியினர் பெற்றனர். இரண்டாம் இடத்தை கல்பாக்கம் இராமேஸ்வரம் அணியினர் பெற்றனர். பெண்கள் பிரிவில் மும்பை அணியினர் வெற்றி பெற்றனர். கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் எஸ்.பி.ஷெல்கே வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.

    ×