search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர்கள் அச்சம்"

    • கீழக்கரையில் அதிகரித்து வரும் தட்டம்மை நோயால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 58 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கீழக்கரையில் 'ருபெல்லா வைரஸ்' என்றழைக்கப்படும் "தட்டம்மை நோய்" பரவி குழந்தைகளை தாக்குவதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கீழக்கரையில் சில நாட்க ளாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், தொண்டை வலி யுடன் ஆரம்பித்து 'ருபெல்லா வைரஸ்' என்ற ழைக்கப்படும் தட்டம்மை நோயாக உருவெடுத்து அதிகம் பரவி வருகிறது.

    இதுகுறித்து கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் கூறுகையில், எமது பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல் நிலைப்பள்ளிகளில் 3 ஆயி ரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது முதல் கட்ட பயிற்சி தேர்வு நடைபெற தொடங்கி விட்டன. இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளதாகவும் மாணவர்க ளின் பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்ற னர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கீழக்கரை நக ராட்சி பகுதியில் தனி கவ னம் செலுத்தி பரவி வரும் தட்டம்மை நோய் குறித்து சுகாதார துறை மற்றும் நகராட்சி துறையினர் இணைந்து கீழக்கரையில் உள்ள அனைத்து பகுதிகளி லும் சிறப்பு முகாம் அமைத்து சுகாதாரத்தை குறித்து பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    இதுகுறித்து கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் கூறுகையில், தற்போது கீழக்கரையில் தட்டம்மை நோய் பரவி வருகிறது. 2 மாதத்திற்குள் இதுவரை யிலும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்துள் ளது. தட்டம்மையை ஒழிப்ப தில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி 9 மாதம் முதல் 15 மாதம் வரை குழந்தைகளுக்கு அந்தந்த தெருக்களிலும் வீதிகளிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து ருபெல்லா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி வந்தது.

    மேலும் 2 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு ஊசி மூலம் செலுத்தும் வழி முறைகளும் உள்ளது. இந்த தடுப்பு ஊசியினை இது வரையிலும் கீழக்கரையில் 48 சதவீத குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ருபெல்லா வைரஸ் என்பது குழந்தை உண்டாகும்போது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றார்.

    மேலும் சர்வதேச அள வில் ருபெல்லா வைரஸ் தட்டம்மை ஒழிப்பு 100 சதவீதம் என்று அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் கீழக்கரையில் ருபெல்லா வைரஸ் தட்டம்மை குழந்தை களை தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் கீழக்கரை முழு வதும் கணக்கெடுப்பு நடை பெற்று வருகிறது என்றார்.

    குழந்தை மருத்துவர் ஹாசிம் கூறியதாவது:-

    இதுவரையிலும் ருபெல்லா வைரஸ் தடடம்மை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 வயது வரை உள்ள குழந்தை களுக்கும் செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பூசி அரசு மருத்துவ மனையில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனையில் 600 முதல் 700 ரூபாய்க்கு செலுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம்.

    மேலும் ருபெல்லா வைரஸ் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிமோ னியா, மூலை காய்ச்சல், கண்பார்வை தாக்குதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த ருபெல்லா வைரஸ் தட்டம்மை 30 வருடத்திற்கு முன்பே முற்றிலும் ஒழிக்கப் பட்டுள்ளது. மீண்டும் கீழக்கரையில் உருவெடுத்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுகா தாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • பெற்றோர்கள் பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தங்களது பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை பெற்று வேறு பள்ளிகளில் சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தில் காட்டுக்கொட்டகை பகுதியில் சுமார் 52 ஆண்டுகள் பழமையான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை தச்சூர், பொற்படாக்குறிச்சி, ஏமப்பேர் காலனி, இந்திலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 224 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த பள்ளி வளாகத்தில் 5 வகுப்பறை கட்டிடங்கள் இருந்தன. இதில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த 2 வகுப்பறை கட்டடங்கள் கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது. மீதமுள்ள 3 வகுப்பறை கட்டிடங்களில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும், 6-ஆம் வகுப்பு மற்றும் தலைமை ஆசிரியர் அறை ஒரு கட்டத்திலும், 7- ஆம் வகுப்பு ஒரு கட்டிடத்திலும் நடைபெறுகிறது. 8-ஆம் வகுப்பு பள்ளியின் முன் உள்ள வராண்டாவில் நடைபெறும் அவல நிலை உள்ளது.

    மேலும் இந்த 3 கட்டிடங்களில் 2க ட்டிடங்கள் தற்போது ஓடுகள் சேதமடைந்து மழை பெய்தால் ஒழுகும் நிலை உள்ளது. இவ்வாறு கட்டிடங்கள் வசதியில்லாமல் ஒரே அறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மூன்று ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமடைந்துள்ளதாகவும் மேலும் சில பெற்றோர்கள் பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தங்களது பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை பெற்று வேறு பள்ளிகளில் சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது.எனவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கட்டிட வசதி இன்றி மாற்று பள்ளிக்குச் செல்வதை தடுக்கும் விதமாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×