search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணுக்கு அரிவாள் வெட்டு"

    • விபசாரத்துக்கு வராததால் பெண்ணை அரிவாள் வெட்டியுள்ளனர்
    • 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

    திருச்சி:

    கரூர் மாவட்டம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாசிக்கா (வயது23). இவர் கடந்த 15ம் தேதி இரவு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் அவரை பாலியலுக்கு அழைத்துள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து மீண்டும் அடுத்த நாள் இரவு அதே பகுதியில் நின்று கொண்டிருந்த சாசிக்காவை அதே நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு சரமாரியாக தாக்கி,அவருடைய தலையில் வெட்டி உள்ளனர் .இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் சுவாசிக்கா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல் அருகே நிலத்தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • செம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மேட்டுப்பட்டி அருகே உள்ள செல்லாயிபுரத்தை சேர்ந்தவர் முனீஸ்குமார். இவர் திருப்பூரில் டெய்லராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு பத்மாவதி(30) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    பத்மாவதிக்கும், உறவினர் செல்லபாண்டிக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று செல்லப்பாண்டி, அவரது மனைவி காளியம்மாள் ஆகியோர் பத்மாவதியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் பத்மாவதியின் தலையில் அரிவாளால் அவர்கள் வெட்டியுள்ளனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த பத்மாவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×