search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபசாரத்துக்கு வராததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
    X

    விபசாரத்துக்கு வராததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

    • விபசாரத்துக்கு வராததால் பெண்ணை அரிவாள் வெட்டியுள்ளனர்
    • 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

    திருச்சி:

    கரூர் மாவட்டம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாசிக்கா (வயது23). இவர் கடந்த 15ம் தேதி இரவு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் அவரை பாலியலுக்கு அழைத்துள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து மீண்டும் அடுத்த நாள் இரவு அதே பகுதியில் நின்று கொண்டிருந்த சாசிக்காவை அதே நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு சரமாரியாக தாக்கி,அவருடைய தலையில் வெட்டி உள்ளனர் .இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் சுவாசிக்கா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×