search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் டீசல் உயர்வு"

    டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய மறியலில் 158 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சேலம்:

    டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடந்தது.

    இதையொட்டி சேலத்தில் கலெக்டர் அலுவகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு உள்பட பல கட்சிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், டீசல், பெட்ரோல், கியாஸ் விலையை குறைக்க கேட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷம் எழுப்பினர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவர்களை கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

    அப்போதும் கலைந்து போகாததால் மறியலில் ஈடுபட்ட 158 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விலையை குறைக்காத மத்திய அரசு வெளிநாட்டுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். #tamilnews
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் நடத்திய ரெயில் மறியல் போராட்டத்தில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பூதலூர்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பூதலூரில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று காலை வட்டார காங்கிரஸ் தலைவர் அறிவழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி செந்தில் சிலம்பரசன், இ.கம்யூனிஸ்டு செந்தில்குமார் உள்பட 50 பேர் பூதலூர் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

    அவர்கள் இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் பூதலூர் ரெயில் நிலையம் வந்ததும் அதனை மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர்.

    இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பூதலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. #tamilnews
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி புதுவை சி.ஐ.டி.யூ. ஆட்டோ சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை சி.ஐ.டி.யூ. ஆட்டோ சங்கத்தின் சார்பில் காந்தி வீதி அமுதசுரபி அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் சீனுவாசன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் மது, மதிவாணன், பழனியப்பன், நூர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. தலைவர் முருகன், பொருளாளர் ஆவடியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசலுக்கான வரியை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். இன்சூரன்ஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

    புதிய போக்குவரத்து சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். அமைப்புச்சாரா நலச்சங்கத்தை நல வாரியமாக மாற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.

    ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆன்லைன் மூலம்அனுமதி பெறும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ×