search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புராண கதாபாத்திரங்கள்"

    பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    மகாபாரத யுத்தம் முடிந்த நிலையில், தர்மர் ஆட்சியில் அமர்ந்தார். அவர் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை ஆண்டு வந்தார். ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர் துவாரகைக்கு சென்று விட்டார். தர்மர் ஆட்சியில் இருந்தபோது கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார் என்ற செய்தியைக் கேட்டு அனைவரும் துயர் அடைந்தார்கள். கிருஷ்ணர் இன்றி இனி தமக்கும் இந்த உலகில் வாழ அருகதை இல்லை என்று நினைத்த பாண்டவர்கள், ராஜ்ஜியத்தை அர்ச்சுனனின் பேரன் பரிஷித்திடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சிவலோக பதவி அடைய இமயமலையை நோக்கி பயணம் செய்தனா். சிவபெருமானே அவர்களுடைய வம்சத்துக்கு குல தெய்வமாக இருந்தார்.

    இமயமலையை அடைந்தபோது, அவர்கள் தவறான பாதையில் நுழைய இருந்தனர். அதைத் தடுக்கும் நோக்கத்தில், சிவபெருமான் தன்னை ஒரு பெரிய கல்லாக மாற்றிக் கொண்டு மேலிருந்து உருண்டு விழுந்து, அவர்கள் செல்ல இருந்த பாதையை மறைத்து நின்றார். தனது சகோதரர்கள் மற்றும் திரவுபதியுடன் நடந்து கொண்டிருந்த பீமன், அந்தப் பாறையைப் பிளக்க தனது கதையை ஓங்கினான். அப்போது அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார்.

    உடனே பீமனும் அவரது சகோதரர்களும் சிவபெருமானை நமஸ்கரித்து, முக்தி தருமாறு வேண்டினார்கள். அவர்களுக்கு முக்தி தந்த பின், சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமாக மாறினார். பூர்வ ஜென்மத்தில் சாபம் பெற்று பூமியில் பிறந்து இருந்த திரவுபதி, சிவபெருமானை தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று மறைந்துவிட்டாள். அதைக் கண்டு பாண்டவர்கள் அழுதார்கள். அவர்களை தேற்றிய சிவபெருமான், “இனி பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள் என்று அருள்புரிந்தார். இமயமலையில் சிவன் அவர்களுக்கு காட்சி தந்த இடத்தில்தான் தற்போது கேதார்நாத் ஆலயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    நடராஜர்

    அண்டம் முழுவதும் நடனத்துக்காக போற்றி புகழப்படுபவர் நடராஜர். சிவபெருமான் 64 வடிவங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த வடிவமாக இது போற்றப்படுகிறது. இந்த கோலத்தில் நடனமாடும் போது உலக உயிர்கள் அனைத்தும் அழிந்து அடுத்த புது உலகம் தோன்றும். அப்ஸமார புருஷா என்னும் குள்ளனை, காலில் விழச் செய்து, அவன் ஆணவத்தை அழிக்க, அவன் மீது நிற்பது போல் நடராஜர் தோற்றம் இருக்கும். நடராஜரின் தோற்றமான உலக உயிர்களின் உருவாக்கத்தை உணர்த்தும் விதத்தில் இருப்பதாக விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

    மந்திரா

    பிரபஞ்சத்தின் தலைமை சிற்பியாக புராணங்கள் விஸ்வகர்மாவை சித்தரிக்கின்றன. இவருடைய மனைவிகளில் ஒருவர்தான் மந்திரா. இவர்களது மகன் நளன், ராமாயண காவியத்தின் போது, வானர வீரர்களில் ஒருவனாக இருந்து, ராமபிரானுக்கு உதவி செய்தவன். முனிவர் ஒருவரிடம் பெற்ற சாபத்தின் நளனுக்கு வரமாக அமைந்து விட்டது. அதாவது எதை நீரில் தூக்கிப் போட்டாலும், அது மூழ்காமல் தண்ணீருக்கு மேலே மிதக்கும் என்பது நளனுக்கு கிடைத்த சாபம். அதுதான் ராமாயண யுத்தத்திற்காக இலங்கைக்குச் செல்ல கற்களைக் கொண்டு பாலம் அமைக்க நளனுக்கு உதவிகரமாக இருந்தது. அந்த சிறப்பு மிக்க பிள்ளையைப் பெற்றெடுத்த தாய் தான் மந்திரா.

    பரீட்ஷித்

    மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் ஐந்து பேரில் அர்ச்சுனனின் பேரன் தான் பரீட்ஷித். இவன் அபிமன்யுவின் மகன். மகாபாரதப் போரின் போது, பரீட்ஷித் தாயின் கருவில் வளர்ந்து வந்தான். அப்போது அஸ்வத்தாமன் ஆயுதத்தை ஏவி, தாயின் வயிற்றில் அடித்தான். இதனால் பரீட்ஷித் பிறக்கும் போதே இறந்து பிறந்தான். ஆனால் கிருஷ்ண பகவானின் அருளால், அவனுக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவனே பின்னாளில் அஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்தான்.

    பரீட்ஷித், ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அங்கு ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரை பரீட்ஷித் பல முறை வணங்கியும், அவர் தியானத்தில் இருந்ததால் அவனைக் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட பரீட்ஷித், முனிவரின் மீது பாம்பு ஒன்றை மாலை போல் போட்டு விட்டுச் சென்றான். சிறிது நேரத்தில் அங்கு வந்த முனிவரின் மகன், தன் தந்தையின் மீது பாம்பை போட்டவன், 7 நாட்களில் பாம்பு கடித்து இறப்பான் என்று சாபமிட்டார். அதன்படியே பரீட்ஷித் பாம்பு தீண்டி இறந்தான்.

    கிருதயுகம்

    உலகின் நான்கு யுகங்களில் முதல் யுகம் கிருதயுகம். இது 17 லட்சத்து 28 ஆயிரம் வருடங்களைக் கொண்டதாகும். கிருத யுகத்தை ‘சத்ய யுகம்’ என்றும் அழைப்பார்கள். ஏனெனில் இந்த யுகத்தில் வாழும் மக்கள் அனைவருமே நேர்மையானவர்களாகவும், தங்கள் கடமையில் இருந்து தவறாதவர்களாகவும் இருப்பார்கள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    பாசுபதம்

    சிவபெருமானின் சக்தி மிகுந்த ஆயுதமாகும். எப் பொழுது தர்மம் அழிகின்றதோ அதை மீட்க இதை பயன்படுத்த வேண்டும். இது அனைத்து படைப்புகளையும் அழிக்கக் கூடியது. பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். அவனது தவவலிமையால் சிவன் அவன் வேண்டும் வரத்தை கேட்குமாறு கூற, அவன் சிவனிடமிருந்து பாசுபதத்தை பெற்றுச் சென்றான்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    நகுலன்


    பாண்டவர்களில் நான்காவதாக பிறந்தவன் நகுலன். பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரிக்கு, அஸ்வினி குமாரர்களின் அம்சமாக பிறந்த இரட்டையர்களில் ஒருவன். இவன் வில் எய்தல் மற்றும் வாள் சண்டையில் சிறப்பு பெற்றவன். பாண்டவர்கள் 5 பேரில் மிகவும் அழகானவனாக நகுலன் கருதப்படுகிறான். இவன் வனவாசத்தின் இறுதி காலத்தில், விரத தேசத்தில் இருந்தான். அப்போது அந்த நாட்டு மன்னனின் குதிரைகளை மேற்பார்வையிடுபவனாக பணியாற்றினான். குதிரைகளோடு பேசும் திறமை படைத்தவனாக இருந்தான். மகாபாரத யுத்தத்தின் போது, கர்ணனின் மகன்களான சித்திரசேனன், சத்தியசேனன், சுஷேனன் ஆகியோரை கொன்றான். கர்ணனுடன் போரிட்டபோது, அவனுக்கு ஈடுகொடுத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினான். இருந்தாலும் நகுலனின் தேரையும், படைகளையும் சிதறடித்தான் கர்ணன்.

    பாண்டவர்கள்

    அஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்த பாண்டுவிற்கு குந்தி, மாத்ரி என இரண்டு மனைவிகள். இவர்கள் இருவருக்கும் பல தேவர்களின் அம்சமாக ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். பாண்டுவின் மகன்கள் என்பதால் இவர்கள் 5 பேரும் ‘பாண்டவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். பாண்டவர்களின் மூத்தவர் யுதிஷ்டிரர், அடுத்ததாக பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன். பாண்டவர்களுடன், கவுரவர்களான துரியோதனன் உள்ளிட்ட 100 சகோதரர்களுக்கும் பொறாமை உணர்வு ஏற்பட்டது. அதன் காரணமாகவே மகாபாரத யுத்தம் உருவானது. யுத்தத்தில் பாண்டவர்கள், கவுரவர்கள் இருவரின் தரப்பிலும் பல இழப்புகள் ஏற்பட்டன.
    ராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    கைகேயி

    அயோத்தி மன்னனான தசரதரின் மனைவியர்களில் ஒருத்தி கைகேயி. இவள் பரதனின் தாய் ஆவாள். ஆரம்ப காலத்தில் கவுசல்யாவின் மகனான ராமனையும் தன் பிள்ளைப் போலவே பாவித்து வந்த கைகேயியின் மனதை, மந்தரை என்பவள் மாற்றினாள். அதன் காரணமாக, தசரதன் தனக்கு தருவதாக ஏற்கனவே சொல்லியிருந்த 2 வரங்களை இப்போது சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள், கைகேயி. அதன்படி ஒரு வரத்தால், ராமன் வனவாசம் செல்ல வேண்டும் என்றும், மற்றொரு வரத்தால் தன்னுடைய மகன் பரதன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்றும் தசரதனிடம் வரம் பெற்றாள். இதனால் தான் ராமன், 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டி வந்தது.

    கத்ரு

    காசியப முனிவரின் மனைவியில் ஒருவள் கத்ரு. இவள் ஒரு முறை தன்னுடைய கணவரிடம், சக்திகள் படைத்த ஆயிரம் பிள்ளைகள் தனக்கு வேண்டும் என்று வரம் கேட்டாள். அதன்படி அவளுக்கு சேஷநாகா, வாசுகி, காலியா உள்ளிட்ட 1000 நாகங்கள் பிறந்தன. இவளின் சகோதரியே, கருட பகவானின் தாய் வினதை. கருடனின் தாயை, கத்ரு அடிமையாக வைத்திருந்த காரணத்தால், தாயை விடுவிக்க தேவேந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்தார் கருட பகவான். தாயை அடிமையில் இருந்து மீட்டெடுத்ததும், மீண்டும் அமிர்த கலசத்தை தேவேந்திரனிடமே ஒப்படைத்து விட்டார் கருடன். இதனால் நாகர்களுக்கும், கருடனுக்கும் பகை ஏற்பட்டது என்பதாக புராணக் கதைகள் சொல்கின்றன.

    கிஷ்கிந்தை

    வானரங்களின் தலைமை இடமாக இருந்த பகுதியே கிஷ்கிந்தை என்று ராமாயணம் குறிப்பிடுகிறது. இந்த இடத்தை பலம் பொருந்திய வாலி அரசாட்சி செய்து வந்தான். ஒரு சில காரணங்களால் வாலிக்கும், அவரது தம்பி சுக்ரீவனுக்கும் பகை இருந்தது. இதனால் சுக்ரீவனை கிஷ்கிந்தையில் இருந்து விரட்டி விட்டதோடு அவனது மனைவியையும் அபகரித்துக் கொண்டான் வாலி. இந்த நிலையில் சீதையை மீட்பதற்காக சுக்ரீவனின் உதவியை நாடி வந்த ராமன், அவனுக்காக வாலியை மறைந்திருந்து தாக்கி கொன்றார். பின்னர் சுக்ரீவனை, கிஷ்கிந்தையின் அரசனாக்கினார். வாலியின் முன்பாக நின்று அவனை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பலத்தில் பாதி, வாலியை சென்றடையும் என்ற வரம் காரணமாக, ராமன் மறைந்திருந்து அவனைத் தாக்கினார் என்கிறது ராமாயண காவியம்.

    காதம்பரி

    உஜ்ஜையினி நகரத்து அரசன் சந்திரபீடன், கந்தர்வப் பெண்ணான காதம்பரி என்பவளை காதல் திருமணம் செய்து கொண்டான். இந்த வரலாற்றை இலக்கியமாக சொல்லிய நூல் தான் ‘காதம்பரி.’ இந்த நூலை ஹர்சவர்த்தன் என்ற அரசனின் அவைப் புலவராக இருந்த பாணபட்டர் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலானது ‘பூர்வ பாகம்’, ‘உத்தர பாகம்’ என இரு பகுதிகளைக் கொண்டது.

    கபந்தன்

    ராமனும், லட்சுமணனும் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை தேடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கால்களும், தலையும் இல்லாத கோர தோற்றம் கொண்ட கபந்தன் என்ற அரக்கன் அவர்களை தடுத்தான். உடனே ராமனும், லட்சுமணனும் அம்பு எய்து, அந்த அரக்கனுக்கு கைகள் இல்லாமல் செய்தனர். பின்னர் அவனது உடலை எரித்தனர். அந்த சாம்பலில் இருந்து சாப விமோசனம் பெற்று ஒரு அழகிய உருவம் கொண்ட கந்தர்வன் வெளிப்பட்டான். தேவலோகத்தில் இசை பாடகனாக இருந்த கந்தர்வன், இந்திரனின் சாபத்தால் இவ்வாறு ஆகியிருந்தான். விமோசனம் பெற்ற அந்த கந்தர்வன் தான், ராவணனிடம் இருந்து சீதையை மீட்க சுக்ரீவனின் உதவியை நாடும்படி ராமனுக்கும் லட்சுமணனுக்கும் ஆலோசனை வழங்கினான்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இன்றும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...

    துவாரபாலகர்கள்

    கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்பவர்கள், கருவறையின் வாசலில் இரு புறமும் சிற்பங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அவர்களே ‘துவார பாலகர்’ என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது ‘வாயில் காப்போர்’ என்பது பொருள். சிவாலயங்களில் எண்ணற்ற துவாரபாலகர்கள் இருப்பதாக அறியப்படுகிறது. சண்டி- முண்டி, திரிசூலநாதர்- மழுவுடையார், சண்டன்- பிரசண்டன் உள்பட ஐந்து இணை துவாரபாலகர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். வைணவ ஆலயங்களில் ஜெயன்-விஜயனும், பெண் தெய்வ கருவறை முன்புள்ள துவாரபாலகிகளில் சுபத்ரா-அரபத்ரா ஆகியோரும் முக்கியமானவர்களாக உள்ளனர்.

    சயவன் முனிவர்

    அஸ்வினி குமாரர்களால் இளமையும், கண் பார்வையும் திரும்ப வரப் பெற்றவர் இந்த சயவன் முனிவர். வயோதிகரான சயவன், நெடுங்காலமாக தவத்தில் இருந்தார். அதனால் அவரைச் சுற்றி புற்று வளர்ந்து, பறவைகள் கூடுகட்டி இருந்தன. ஒரு முறை அங்கு வந்த சர்யாதி மன்னனின் மகள் சுகன்யா, விளையாட்டாய் பறவைகளின் கூட்டைக் கலைக்க, அவளது விரல் எதிர்பாராத விதமாக தவத்தில் ஆழ்ந்திருந்த முனிவரின் கண்ணில்பட்டு பார்வை பறிபோனது.



    இதையடுத்து தனது மகளை, முனிவருக்கே திருமணம் செய்து வைத்தான் சர்யாதி மன்னன். ஒரு நாள் அஸ்வினி குமாரர்கள், சுகன்யாவைச் சந்தித்தனர். சயவன் முனிவருக்கு இளமையையும், கண் பார்வையையும் தருவதாக கூறினர். பின் சயவன் முனிவரும், அஸ்வினி குமாரர்களும் அங்கிருந்த குளத்தில் மூழ்கி எழுந்தனர். அப்போது அவர்கள் மூவருமே ஒரே உருவத்தில் காட்சியளித்தனர். அதில் சயவன் முனிவரை சரியாக அடையாளம் காட்டினாள் சுகன்யா. இதையடுத்து சயவன் முனிவருக்கு இளமையும், கண் பார்வையும் கிடைத்தது.

    துரியோதனன்

    திருதராஷ்டிரன்- காந்தாரி தம்பதியரின் மூத்த மகன். கவுரவர்கள் நூறு பேரில் முதன்மையானவன். ‘துரியோதனன்’ என்பதற்கு ‘வெற்றி கொள்ளப்பட முடியாதவன்’ என்று பொருள். உடல் குறைபாடு காரணமாக தந்தையிடம் இருந்து நழுவிச்சென்ற அரசாளும் பதவியை, பாண்டவர்களிடம் இருந்து பெறவேண்டும் என்ற எண்ணம், துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்களிடம் வன்மத்தை விதைத்தது. அதன் காரணமாக மகாபாரதப் போர் மூண்டது. 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போரின் இறுதி நாளில் பீமனுடன் நடந்த யுத்தத்தில் துரியோதனன் கொல்லப்பட்டான்.

    துர்வாசர்

    மாபெரும் தவசிகளான அத்திரி - அனுசூயா தம்பதியரில் ஆகச் சிறந்த புதல்வர் தான் துர்வாசர். இவர் மற்ற முனிவர்களைப் போல அல்ல.. தன்னுடைய முன் கோபத்தாலும், சட்டென்று ஒருவரை சபித்துவிடும் தன்மையாலும் கவனம் பெற்றவர். விஸ்வாமித்திரரின் மகளான சகுந்தலை, துஷ்யந்தன் என்ற மன்னனை கந்தர்வ மணம் செய்து கொண்டாள். ஒரு முறை தன்னை அவமதித்த குற்றத்திற்காக துஷ்யந்தனின் மனதில் இருந்து சகுந்தலையின் நினைவுகளை அகற்றி சாபம் அளித்தார் துர்வாசர். சாபத்தை மட்டுமே அளிப்பவர் அல்ல அவர். தன் மனம் மகிழும் படி நடந்து கொள்பவர்களுக்கு வரமும் அளிப்பவர். அவர் பாண்டுவின் மனைவி குந்திக்கு ‘தேவர்களில் எவரை நினைத்தாலும் அவர்கள் வந்து அருள்வார்கள்’ என்ற வரம் அளித்தார். அந்த வரம் தான் கர்ணன், பாண்டவர்களான தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறக்க காரணமாக இருந்தது.
    ×