என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி விமான நிலையம்"

    • மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது.
    • பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வரவுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை நகராட்சி சார்பில் லாஸ் பேட்டை சலவைத்துறை திறப்பு விழா நடைபெற்றது.

    அதில் புதிதாக கட்டப்பட்ட துணி பாதுகாப்பு அறைகளை திறந்து பயனாளிகளிடம் சாவிகளை வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுச்சேரியில் முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ. 500 ஓய்வூதியம் பிப்ரவரி 7-ந்தேதி முதல் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட ரூ.2500 உதவித் தொகை வருகிற பிப்ரவரி 10-ந் தேதி முதல் கிடைக்கும். புதிதாக தொடக்கப்பள்ளிகளில் 190 ஆசிரியர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்கள்.

    இளநிலை எழுத்தர், முதுநிலை எழுத்தர்கள் 400 பேர் அடுத்த மாதம் எடுக்கவுள்ளோம். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 4 ஆயிரம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை தந்துள்ளது. அடுத்து 500 அங்கன்வாடி ஊழியர்கள் பணியமர்த்த உள்ளோம். சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை தருவோம் என சொன்னோம். அரசு மற்றும் தனியார் மூலம் வேலை தரப்பட்டுள்ளது.

    சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான 750 ஏக்கர் நிலம் எடுத்து அப்படியே உள்ளது. புதிய தொழிற்பேட்டையை இங்கு உருவாக்க உள்ளோம். பல தொழிற்சாலைகள் வரவுள்ளன. ஏராளமான இளையோருக்கு வேலை கிடைக்கும். மீனவ சமூக மக்களுக்கு ரூ. 123 கோடி ஒதுக்கி பணிகள் செய்கிறோம்.

    மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது. பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வரவுள்ளார். நிறைய திட்டங்கள் தரவுள்ளார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த அரசு மத்திய அரசு நிதி உதவியுடன் மேம்பாட்டு பணிகளைச் செய்து வருகிறது.

    புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிக்கு ரூ 450 கோடியில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வ கணபதி எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • புதுச்சேரி விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு தினந்தோறும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    தினமும் காலை 11.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது.

    மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது. அங்கிருந்து 3.05 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது.

    புதுவையில் இருந்து 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதில் 74 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நீடிக்கும் நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல் புதுச்சேரி விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வந்துள்ளது.

    மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி விமான நிலையத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுச்சேரி விமான நிலையத்திற்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் கொண்ட கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.

    ×