என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரி விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
- நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- புதுச்சேரி விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வந்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு தினந்தோறும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் காலை 11.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது.
மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது. அங்கிருந்து 3.05 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது.
புதுவையில் இருந்து 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதில் 74 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நீடிக்கும் நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல் புதுச்சேரி விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வந்துள்ளது.
மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி விமான நிலையத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுச்சேரி விமான நிலையத்திற்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் கொண்ட கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.






