search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய வைரஸ்"

    • பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கேரளா அதிகாரிகள் தெரிவித்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
    • எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசியார் சோதனை அதிகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

    புதிய வைரஸ் தொற்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பரவி வருவதாகவும், கேரளாவில் 230 பேர் இது வரை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

    இது தொடர்பக தமிழ்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கேரளா அதிகாரிகள் தெரிவித்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    பெரிய அளிவில் பாதிப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    தமிழ்நாட்டில் காய்ச்சல் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசியார் சோதனை அதிகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பல்வேறு விதமான உருமாற்றங்களை பெற்று வருகிறது. தற்போது இருப்பது எந்த மாதிரியான உருமாற்றம் என்பதை குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும்  என்றார்.

    • இந்தியாவில் நிலைமை ஆபத்து ஏற்படும் வகையில் இல்லை என அறிவிப்பு.
    • சுகாதாரத் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிறுத்தியுள்ளது.

    சீனாவில் சில வாரங்களாக குழந்தைகள் இடையே சுவாச பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால் மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஞாயிற்று கிழமை அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியது.

    அதில், இந்தியாவில் நிலைமை ஆபத்து ஏற்படும் வகையில் இல்லை என்றும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், இந்தியாவிலும் பல்வேறு காரணங்களால் சுவாச கோளாறுகள் அதிகரித்து வருவதால், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட், அரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள், சுவாசக் கோளாறு பாதிப்பால் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், பருவகால காய்ச்சல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பருவகால காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகளை பட்டியலிட்டு, ஆலோசனையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதில், இருமல் அல்லது தும்மலின்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது மற்றும் நெரிசலான இடங்களில் முகமூடிகளைப் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும்.

    ×