search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய சாலை பணிகள்"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • தி.மு.க. நிர்வாகிகள் பேரா சிரியர் டி.சி. மகேஷ், தாமரை பிரதாப் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    தென்தாமரைகுளம் :

    தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 71 லட்சம் மதிப் பில் சாலை பணிகள் நடக்கிறது. இந்தப் பணிகளை முகிலன்குடியிருப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த் திகா பிரதாப், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாநில தலைமை செயற்குழு உறுப் பினர் ஆர்.எஸ்.பார்த்த சாரதி, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரை பாரதி, செயல் அலுவலர் சந்தோஷ் குமார், பேரூ ராட்சி துணை தலைவி மல்லிகா, கவுன்சி லர்கள் எட்வின்ராஜ், பூவியூர் காமராஜ், அமுதா பால்ராஜ், திருமதிபாய், தி.மு.க. நிர்வாகிகள் பேரா சிரியர் டி.சி. மகேஷ், தாமரை பிரதாப் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • வேதம்புதூர் மயானம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கொண்டனர்.

    தென்காசி:

    முதல்-அமைச்சரின் கிராமப்புற சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் அண்ணாநகர் 4-வது மற்றும் 6-வது தெரு, காமராஜ் நகர் மெயின் ரோடு, அய்யாபுரம், அழகப்பபுரம் மயானம் செல்லும் பகுதி, வேதம்புதூர் மயானம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    அதனை குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் மற்றும் தென்காசி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அழகு சுந்தரம் ஆகியோர் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முக சுந்தரம், வார்டு கவுன்சி லர்கள் கலைச்செல்வி, சுப்பையா, கருப்பசாமி, மைதீன் பாத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் வேம்பையா, ஒப்பந்ததாரர் விஜய பாலன், குத்துக்கல்வலசை ஆனந்த், சுந்தர்ராஜ் மற்றும் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×