search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குத்துக்கல்வலசை ஊராட்சியில் ரூ.1.40 கோடியில் புதிய சாலை பணிகள்
    X

    குத்துக்கல்வலசை ஊராட்சியில் ரூ.1.40 கோடியில் புதிய சாலை பணிகள்

    • வேதம்புதூர் மயானம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கொண்டனர்.

    தென்காசி:

    முதல்-அமைச்சரின் கிராமப்புற சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் அண்ணாநகர் 4-வது மற்றும் 6-வது தெரு, காமராஜ் நகர் மெயின் ரோடு, அய்யாபுரம், அழகப்பபுரம் மயானம் செல்லும் பகுதி, வேதம்புதூர் மயானம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    அதனை குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் மற்றும் தென்காசி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அழகு சுந்தரம் ஆகியோர் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முக சுந்தரம், வார்டு கவுன்சி லர்கள் கலைச்செல்வி, சுப்பையா, கருப்பசாமி, மைதீன் பாத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் வேம்பையா, ஒப்பந்ததாரர் விஜய பாலன், குத்துக்கல்வலசை ஆனந்த், சுந்தர்ராஜ் மற்றும் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×