search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய ஊதிய ஒப்பந்தம்"

    • பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
    • பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அனைத்து வகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பணியாளர்கள் யூனியன் சார்பில் 3-ம் பேரவை கூட்டம் திருப்பூர் தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். திருப்பூர் கூட்டுறவு கட்டிட சங்க செயலாளர் செல்வி வெங்கடாசலம் வரவேற்றார். பொதுச்செயலாளர் சக்திவேல் கனகரத்தினம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் நாகராஜ் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.

    பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி தமிழ்நாடு அரசு பணியா–ளர்–கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் துணை தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் பணியாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளம், பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால நிதிப்பயன்கள் வழங்க வேண்டும். புதிய கடன்களை வழங்க வேண்டும். மாற்றுப்பணி, ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு தள்ளுபடி திட்டங்களால் சங்கங்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொகையை வழங்க வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி தர வேண்டும். வீட்டுவசதி சங்கங்கள் மூலமாக பொது இ-சேவை மையம் அமைக்க அனுமதிக்க வேண்டும். அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீட்டுவசதி சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×