search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகளூர்"

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம்,புகளுர் அருகே செம்படா பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவரது நண்பர்கள் திருநெல்வேலியை சேர்ந்த  முத்துக்குமார் (26) மற்றும் சிவகங்கையை சேர்ந்த பரமசிவம் (37).

    இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புகளுர் ரெயில்வே கேட் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முத்துக்குமார் ஓட்ட தினேஷ்குமாரும், பரமசிவமும் பின்னால் அமர்ந்து இருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் இருந்த தடுப்பு சுவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 3 பேரும்  கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் முத்துகுமார் பரிதாபமாக இறந்தார். பரமசிவம், தினேஷ்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
    புங்கோடையில் உள்ள புகளுர் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா? என்று குளத்துப்பாளையம் பொதுமக்கள் கோரிக்கை எதிர்பார்த்துள்ளனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேட்டமங்கலத்திலிருந்து புங்கோடையில் உள்ள புகளுர் வாய்க்காலில் கழிவு நீர் கலக்கும் வகையில் சிறு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. வேட்டமங்கலம், குளத்துப்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய நிலத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் , இந்தகால்வாய் வழியாக சென்று புங்கோடையில் உள்ள புகளுர் வாய்க்காலில் கலக்கிறது. கழிவு நீர்க்கால்வாய் அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளது. கழிவுநீர் கால்வாய் தூர்வாரி பலமாதங்கள் ஆனதால் கழிவுநீர் கால்வாயில் பல்வேறு வகையான செடி கொடிகள் அதிக அளவில் முளைத்துள்ளது.

    தூர்வாராததால் அடர்ந்த செடி, கொடிக்குள் கொசுக்கள் தங்கி முட்டையிட்டு ஆயிரக் கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது. இதனால் அருகமையில் வீடுகளில் உள்ள பொதுமக்களை கொசுக்கள் தீண்டி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு மற்றும் பல்வேறு நோய்கள் வரும் நிலை உள்ளது. சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு அவதியுற்று வருகின்றனர்.

    மேலும் கழிவு நீர் கால்வாய் தூர் வாரப்படாததால் விவசாய நிலத்திலிருந்து வரும் கழிவு நீர், மழைக்காலங்களில் வரும் வெள்ள நீர் இரண்டும் அதிக அளவில் வருவதால் கழிவு நீர் கால்வாயில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் புகுவதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் அதிக அளவில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்றி பல்வேறு வகையான நோய்கள் பொதுமக்களை தாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளத்துப்பாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×