search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபல கொள்ளையன் கைது"

    மதுரையை கலக்கிய பிரபல கொள்ளையனை மடக்கி பிடித்த வத்தலக்குண்டு போலீசாரை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
    வத்தலக்குண்டு:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 30). இவர் மீது மதுரை மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் பிடிவாரண்ட் குற்றவாளியும் ஆவார்.

    அருண்பாண்டியன் மீது, வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் தாதபட்டி சின்னையா என்பவரிடம் செல்போனை பறித்து சென்ற வழக்கு உள்ளது.

    இந்த வழக்கிற்காக வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருண்பாண்டியன் வாடிப்பட்டியில் பதுங்கி உள்ள ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த வத்தலக்குண்டு போலீசார் தப்பி ஓட முயன்ற அருண்பாண்டியனை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவனை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அருண்பாண்டியனை பிடித்த வத்தலக்குண்டு போலீசாரை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


    சேலத்தில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 25 பவுன் நகையை மீட்டனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம், வேம்படிதாளம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் விசைத்தறி தொழில் நடத்தி வருகிறார். இவரின் மனைவி சாந்தி(வயது 52). இருவரும் சேலம் திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு கடந்த 30-ந் தேதி திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர். 

    அப்போது காரின் பின் சீட்டில் 25 பவுன் நகையை வைத்துவிட்டு மண்டபத்திற்குள் சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கு வந்து பார்த்த போது காரில் இருந்த நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    பின்னர் இது குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரித்ததில், தாதகாப்பட்டியில் உள்ள அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலீசார் 25 பவுன் நகையை மீட்டனர், மேலும் வேறு ஏதும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×