என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபல கொள்ளையன் கைது"

    • தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 27 வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளது.
    • கொள்ளையன் ஸ்டீபன் பகல் நேரத்தில் மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர்.

    சிதம்பரம்:

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்த பல்வேறு மாவட்ட போலீசார் கடலூர் வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம் படுகையை சேர்ந்தவர் கஜேந்திரன். சாப்ட்வேர் ஊழியர்.

    இவர் கடந்த 18-ந் தேதி தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 20 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து கஜேந்திரன் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை நகர் மெயின் ரோட்டில் வாகன சோதனையின் போது ஒருவர் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது கஜேந்திரன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

    அவரது பெயர் ஸ்டீபன் (வயது30). கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் விசாரித்த போது கஜேந்திரன் வீட்டில் கொள்ளையடித்த நகைகளை சிதம்பரம் அடுத்துள்ள சித்தலப்பாடி சாலையோராம் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    அதனை பறிமுதல் செய்வதற்காக அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், போலீஸ்காரர் ஞானப்பிரகாசம் உள்ளிட்ட போலீசார் ஸ்டீபனை சித்தலப்பாடிக்கு அழைத்து சென்றனர்.

    சித்தலப்பாடி சாலையில் சென்ற போது ஸ்டீபன் அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் ஞானப்பிரகாசத்தை கையில் வெட்டினார். மேலும் இன்ஸ்பெக்டரையும் தாக்க முயன்றார். இதனால் சுதாரித்து கொண்ட இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஸ்டீபன் காலில் சுட்டார்.

    இதில் அவரது கால் முட்டியில் குண்டு பாய்ந்து ஸ்டீபன் சுருண்டு விழுந்தார். அவர் அண்ணாமலைநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே மருத்துவமனையில் கொள்ளையன் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஞானப்பிரகாசமும் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட ஸ்டீபன் மீது தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 27 வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் அவர் கேரளாவிலும் கைவரிசை காட்டி உள்ளார்.

    கொள்ளையன் ஸ்டீபன் பகல் நேரத்தில் மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர். திருடும் நகைகளை உடனடியாக விற்பனை செய்து அந்த பணத்தில் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம் என போலீசார் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பெண்ணை மனைவியாக வைத்திருந்தததாகவும் போலீசார் தெரிவித்தனர். பிரபல கொள்ளையன் ஸ்டீபன் பிடிபட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரிக்க பல்வேறு மாவட்ட போலீசார் கடலூருக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். ஸ்டீபனிடம் அதிரடி விசாரணை நடத்த உள்ளனர். 

    மதுரையை கலக்கிய பிரபல கொள்ளையனை மடக்கி பிடித்த வத்தலக்குண்டு போலீசாரை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
    வத்தலக்குண்டு:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 30). இவர் மீது மதுரை மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் பிடிவாரண்ட் குற்றவாளியும் ஆவார்.

    அருண்பாண்டியன் மீது, வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் தாதபட்டி சின்னையா என்பவரிடம் செல்போனை பறித்து சென்ற வழக்கு உள்ளது.

    இந்த வழக்கிற்காக வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருண்பாண்டியன் வாடிப்பட்டியில் பதுங்கி உள்ள ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த வத்தலக்குண்டு போலீசார் தப்பி ஓட முயன்ற அருண்பாண்டியனை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவனை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அருண்பாண்டியனை பிடித்த வத்தலக்குண்டு போலீசாரை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


    சேலத்தில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 25 பவுன் நகையை மீட்டனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம், வேம்படிதாளம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் விசைத்தறி தொழில் நடத்தி வருகிறார். இவரின் மனைவி சாந்தி(வயது 52). இருவரும் சேலம் திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு கடந்த 30-ந் தேதி திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர். 

    அப்போது காரின் பின் சீட்டில் 25 பவுன் நகையை வைத்துவிட்டு மண்டபத்திற்குள் சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கு வந்து பார்த்த போது காரில் இருந்த நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    பின்னர் இது குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரித்ததில், தாதகாப்பட்டியில் உள்ள அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலீசார் 25 பவுன் நகையை மீட்டனர், மேலும் வேறு ஏதும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×