search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின் ஆலன்"

    • முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.
    • பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்னே எடுக்க முடிந்தது.

    டுனிடின்:

    நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 62 பந்தில் 137 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், 16 சிக்சர்களும் அடங்கும்.

    16 சிக்சர்கள் விளாசியதன் மூலம் பின்ஆலன் புதிய சாதனை புரிந்தார். அவர் ஆப்கானிஸ்தான் வீரர் ஹசரத்துல்லாவை சமன் செய்தார். ஹசரத்துல்லா 2019-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக டேராடூன் மைதானத்தில் 16 சிக்சர்கள் அடித்து இருந்தார். தற்போது இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.

    மேலும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் பின்ஆலன் படைத்தார். இதற்கு முன்பு ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரராக மெக்கல்லம் திகழ்ந்தார். அவர் 2012-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக பல்லேகலேவில் 123 ரன் எடுத்து இருந்தார்.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. 4-வது 20 ஒவர் போட்டி வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    ×