search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு திட்டம்"

    • பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • மேலும் விபரங்களுக்கு, 91500 57749 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவ கங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்கி ழமை சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

    அதில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் இ-சேவை மையம் மூலமாக விண்ண் பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கப் பெறாமல் உள்ள பயனாளி கள் ஒப்புகை ரசீதுடன் கூடிய இணைய வழி விண்ணப்பத்துடனும், 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளும், வைப்புத்தொகை பத்திர நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக் கணக்கு புத்தக முகப்பு நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) 2 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகிய உரிய சான்றுகளுடன், இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு, 91500 57749 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கருதி முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • இந்த திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும்.

    சேலம்:

    பெண் சிசுக்கொலையை ஒழித்தல், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கருதி முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருப்பின் அந்த குழந்தை பேரில் ரூ.50 ஆயிரம், 2 குழந்தைகள் இருப்பின் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு 16 வயது பூர்த்தியான பின் முதிர்வுத்தொகை வட்டியுடன் பயனாளி வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

    இந்த திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் 40 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குழந்தையின் 3 வயதுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

    10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். புதிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து பயன்படலாம். என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    ×