search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ம.க. ஆர்ப்பாட்டம்"

    • ரூ.26 கோடி பாக்கி தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூர் அடுத்த கரைப்பூண்டியில் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ரூ.26 கோடியை வழங்க கோரி நேற்று ஆலை முன்பாக பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பாமக வடக்கு மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் கோபி, கே.சி.குமரன், பாலமூர்த்தி, விஜயன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

    மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் மீ.கா செல்வகுமார் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, கணேசன், பொதுக்குழு உறுப்பினர் கலைமணி மாவட்டத் தலைவர் ஏழுமலை உள்பட பலர் கலந்த கொண்டனர்..

    கரும்பு நிலுவை பாக்கி ரூபாய் 26 கோடியே வட்டியுடன் வழங்க கோரியும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி உடனடியாக வழங்கக் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    முடிவில் ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

    • டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்தது
    • 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷம் எழுப்பினர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கூட நகரம் ஊராட்சி பார்வதிபுரம் அருகே உள்ள உள்ளி கூட்டு ரோடு அருகில் பல மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்பட்டது.

    இந்த டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதாகவும் இந்த டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி கூட நகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை இதனையடுத்து வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் சார்பில் டாஸ்மாக் கடை அகற்றக் கோரி கடைக்கு எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட அமைப்பு செயலாளர் பாலாஜி, மாவட்ட அமைப்பு தலைவர் பாபு யாதவ், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், காந்திராஜா, காமராஜ் அரவிந்த், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட நகரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.குமரன் வரவேற்றார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் ரமேஷ், முகமதுபாஷா, மாவட்ட பொறுப்பாளர்கள் குணசீலன்அன்பரசன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

    குடியாத்தம் தாலுகா போலீச இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் 25க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • பொதுமக்கள் பல கிலோமீட்டர் சுற்றி செல்வதாக புகார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் அடுத்த கூடநகரம் ெரயில்வேகேட் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு கூடநகரம் ெரயில்வே கேட் மூடப்பட்டது.

    இதனால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு தங்கள் பகுதிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

    குறிப்பாக கூடநகரம் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கூட்டுறவு வங்கி, மேல் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள வங்கி, மின்சார வாரிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பொது மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய இடங்களுக்கு செல்ல இந்த ெரயில்வே கேட் மூடப்பட்டதால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த ெரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டும் ெரயில்வே மேம்பால பணியை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் நெடுஞ்சாலை துறையை கண்டித்து மேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கூட நகரம் ெரயில்வே கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மாவட்ட அமைப்புச் செயலாளர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் தினகரன், காமராஜ் அரவிந்த், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட நகரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.குமரன் வரவேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் ரமேஷ், குமார், முகமதுபாஷா மாவட்ட பொறுப்பாளர்கள் குணசீலன், அன்பரசன், திருமலை, கோபி, சதீஷ், ஞானவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக ெரயில்வே கேட்டை திறந்து விட வேண்டும், ரயில்வே மேம்பாலம் உடனடியாக கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலை துறை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தல்
    • ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்களை தடை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் அ.ம.கிருஷ்ணன், ஆறுமுகம், மாவட்ட பொருளாளர்கள் உமாமகேஸ்வரி, அமுதா சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் க.சரவணன் வரவேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கஞ்சா, குட்கா, ஆன்ஸ், பான்பராக் போன்ற போதை பொருட்களை தடை செய்ய கோரி வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், முன்னாள் மாநில துணை அமைப்பு செயலாளர் தங்கதுரை, ஒன்றிய செயலாளர் சபரிகிரிசன், பாரத், ரவி, தேவேந்திரன், நகர செயலாளர்கள் கஜேந்திரன், ஞானசேகர், பாமக நிர்வாகிகள் கிரிகுமரன், செல்வம், கண்ணதாசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    ×