search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
    X

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் பா.ம.க. சார்பில் போதை பொருட்களை தடை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்

    • போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தல்
    • ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்களை தடை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் அ.ம.கிருஷ்ணன், ஆறுமுகம், மாவட்ட பொருளாளர்கள் உமாமகேஸ்வரி, அமுதா சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் க.சரவணன் வரவேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கஞ்சா, குட்கா, ஆன்ஸ், பான்பராக் போன்ற போதை பொருட்களை தடை செய்ய கோரி வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், முன்னாள் மாநில துணை அமைப்பு செயலாளர் தங்கதுரை, ஒன்றிய செயலாளர் சபரிகிரிசன், பாரத், ரவி, தேவேந்திரன், நகர செயலாளர்கள் கஜேந்திரன், ஞானசேகர், பாமக நிர்வாகிகள் கிரிகுமரன், செல்வம், கண்ணதாசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×