search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் மோதி வாலிபர் பலி"

    • தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஜடேரி பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவரது நண்பர் மணிகண்டன்.

    இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் நோக்கி நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திருப்பனங்காடு கிராமம் அருகே வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் விஜய் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் விஜய் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சஞ்சய் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை சஞ்சய் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மிட்டபள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவரது மகன் சஞ்சய் (வயது 22). இவர் நேற்று மிட்டபள்ளி சாலையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சஞ்சய் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சஞ்சயை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சஞ்சய் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

    ×