என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Teenager dies after being hit by a bus"
- தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஜடேரி பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவரது நண்பர் மணிகண்டன்.
இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் நோக்கி நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பனங்காடு கிராமம் அருகே வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் விஜய் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் விஜய் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்றார்
செய்யாறு:
வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவரது மனைவி சரண்யா இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
பார்த்திபன் நேற்று தனது மாமியார் வீடான செய்யாறு அருகே உள்ள தாண்டுக்குளம் கிராமத்திற்கு மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்றார்.
அப்போது அணைக்கட்டு ரோட்டில் தாண்டுக்குளம் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் பார்த்திபன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் பார்த்திபன் தூக்கி வீசப்பட்டு இதில் பலத்த காயமடைந்தார்.
பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக செய்யாறு மாவட்ட அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்து விட்டார்.
இது குறித்து பார்த்திபனின் அண்ணன் மூர்த்தி செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்