search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்காரப்பேட்டை அருகே விபத்து:  அரசு பஸ் மோதி வாலிபர் பலி
    X

    சிங்காரப்பேட்டை அருகே விபத்து: அரசு பஸ் மோதி வாலிபர் பலி

    • அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சஞ்சய் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை சஞ்சய் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மிட்டபள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவரது மகன் சஞ்சய் (வயது 22). இவர் நேற்று மிட்டபள்ளி சாலையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சஞ்சய் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சஞ்சயை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சஞ்சய் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×