search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி விபத்து"

    பவானி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் மெக்கானிக் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பவானி:

    பவானி அம்மன் நகர் பழனிபுரம் 1-வது வீதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன்முருகேசன் (வயது 31) மோட்டார் மெக்கானிக்.

    நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குரும்பநாயக்கன் பாளையம் விதை பண்ணை அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த அடிபட்டது.

    இதில் படுகாயம்அடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர். விபத்தில் பலியான முருகேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானி அருகே மாநில கபடி வீரர் உள்பட 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கோனேரிபட்டி பிரிவு குதிரைக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ரமேஷ். டிப்ளமோ முடித்துள்ளார்.

    கபடி வீரரான இவர் மாநில அளவில் நடந்த பல்வேறு போட்டியில் விளையாடி உள்ளார். சிறந்த கபடி வீரர். இவரது நண்பர் பவானி அடுத்த ஊஞ்சப்பாளயத்தை சேர்ந்த அழகேசன். இன்று காலை 7.45 மணியளவில் அழகேசன் மோட்டார் சைக்கிளில் இருவரும் ஒரு வேலை வி‌ஷயமாக சென்று கொண்டிருந்தனர்.

    பவானி அடுத்த கேசரி மங்கலம் பிரிவில் சென்ற போது முன்னாள் சென்ற ஒருவாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரேவந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பவானி அரசுஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×