search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழக்கம்"

    • திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • இளம்பெண்ணின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமான முறையில் பதிவிட்டுள்ளார்.

    தஞ்சாவூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாக்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 34).

    இவர் நெல் அறுவடை எந்திர டிரைவர்.

    இவர் அம்மாக்குளத்தூரில் இருந்து நெல் அறுவடைக்காக தஞ்சை பகுதிக்கு வேலைக்கு வந்தார்.

    அப்போது அவருக்கும், திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

    இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவரை தவறானவர் என்பது போல் சித்தரித்து சமூக வலைதளத்தில் காசிநாதன் பதிவிட்டுள்ளார்.

    மேலும் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமான முறையில் பதிவிட்டுள்ளார்.

    இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை தேடி வந்தனர்.

    காசிநாதனின் செல்போன் டவர் காட்டிய பகுதி உட்பட பல்வேறு இடங்களில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை செய்தபோது காசிநாதன் அவரது சொந்த ஊரில் ஒரு தோப்பில் மறைந்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்று காசிநாதனை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவரை கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து நீதிபதி முன்பு காசிநாதனை ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

    • நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூ ரியில் பாதையை மாற்றும் போதை என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
    • மேலும் அரசால் தடை செய்யப்பட்ட, போதையை உருவாக்கும் பாக்குகளை விற்பனை செய்த 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அவர்களது சொத்துக்கள் முடக்கப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூ ரியில் பாதையை மாற்றும் போதை என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமை வகித்து பேசியதாவது,

    கொரோனா பரவல் காலத்தில் சிலர் தனிமை சூழலில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையை மாற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்தை போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் அனைத்து துறைகளும் சேர்ந்து காவல்துறை பங்க ளிப்புடன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விண்ணை தொடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 177 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதை பொருட்களால் புற்றுநோய் ஏற்படுதல் உள்ளிட்ட தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிகாட்டப்பட்டன.

    இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ லர்கள் கொடுத்த தகவ லின் அடிப்படையில் 86 மாணவர்கள் போதை பொருட்கள் பழக்கத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் அரசால் தடை செய்யப்பட்ட, போதையை உருவாக்கும் பாக்குகளை விற்பனை செய்த 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அவர்களது சொத்துக்கள் முடக்கப்பட்டன. தவறு செய்த 2 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய நம்பிக்கை ஊட்டல் காரணமாக பல்வேறு புகார்கள் மற்றும் ஆலோசனைகள் கூறி குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தினசரி தொலைபேசி அழைப்புகள் வரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    முகாமில் பங்கேற்றுள்ள பேராசிரியர்கள் தங்களது சமூகப் பொறுப்புணர்வை உணர்ந்து முயற்சி மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்ட வேண்டும். முகாமை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு விண்ணை தொடு வழிகாட்டுதல் நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும். முதல் கட்டமாக கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரி வளாகத்தை போதை பொருட்கள் இல்லாத வளாகமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சாய்சரன் தேஜஸ்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சதீஷ், மாவட்ட சமூக நல அதிகாரி கீதா, கல்லூரி முதல்வர் குமாரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1 முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு.
    • சேமிப்பு பழக்கம் சிறுவயதிலேயே உருவாகும்.

    கும்பகோணம்:

    உலக சிக்கன நாளையொட்டி திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கஞ்சனூர், கோட்டூர், மணக்குடி, துகிலி திருக்கோடிகாவல் உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் உள்ள 1 முதல் 10 வயது உள்ள பெண் குழந்தைகளுக்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் தனது சொந்த நிதியில் முதல் தவணையை செலுத்தி செல்வமகள் திட்டத்தின் கீழ் அஞ்சலக சேமிப்பு கணக்கை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசும்போது:-

    1 முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கபட்டுள்ளது. இதன் மூலம் சேமிப்பு பழக்கம் சிறுவயதிலேயே உருவாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் அண்ணாதுரை, அஞ்சலக கண்காணிப்பாளர் கும்பசாமி, துணைச் செயலாளர் குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுமதிகுமார், மோகன், ரேவதி பாண்டியன், செல்வராஜ், கரும்பு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பாலகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய குழு உறுப்பினர் தங்கராசு நன்றி கூறினார்.

    ×