search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கு விடுமுறை"

    • மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்
    • இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது.

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறை ரெயிலடி ஆரோக்கியநாதபுரம் பகுதியில் 7 பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவித்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் பலத்த பாதுகாப்புடன் எழுதி சென்றனர்.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது. இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதையடுத்து ஆட்டை மீட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை கடித்து ஆடு இறந்ததா ? என்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதன் முடிவில் தான் ஆடு இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியவரும். இருந்தாலும் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். பெரும்பாலன பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். 3 நாட்களாகவே இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    சிறுத்தை பிடிப்படாததால் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நேற்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மயிலாடுதுறையில் குடியிருப்பு பகுதிகளில் 3 நாட்களாக சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போது வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருக்காது.
    • நேற்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறை ரெயிலடி ஆரோக்கியநாதபுரம் பகுதியில் 7 பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவித்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் பலத்த பாதுகாப்புடன் எழுதி சென்றனர்.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது. இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    இன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 5 சிறப்பு அதிகாரிகள் மற்றும் மதுரையில் இருந்து 2 குழுவினர் வருகை தர உள்ளனர்.

    தற்போது வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருக்காது. அதே வேளையில் இரவு நேரத்தில் நடமாட்டம் இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ப தெர்மல் டிரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிரோன் மூலம் இன்று இரவு கண்காணிக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதையடுத்து ஆட்டை மீட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை கடித்து ஆடு இறந்ததா ? என்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதன் முடிவில் தான் ஆடு இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியவரும். இருந்தாலும் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். பெரும்பாலன பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். 3 நாட்களாகவே இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    சிறுத்தை பிடிப்படாததால் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நேற்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வன உயிரின ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும்போது,

    காடுகளில் இருந்து சிறுத்தை ஆறுகள் வழியாக மயிலாடுதுறைக்கு வந்திருக்கலாம். இல்லாவிட்டால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரை தேடி அல்லது தண்ணீர் பற்றாக்குறையால் அருகில் உள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். அந்த நேரத்தில் அங்குள்ள ரெயில் நிலையங்களில் நின்ற சரக்கு ரெயிலில் ஏதாவது ஒரு பெட்டியில் ஏறி மயிலாடுதுறைக்கு வந்திருக்கலாம் என்றார்.

    தொடர்ந்து பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விரைவில் சிறுத்தை சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் சிறுத்தை நடமாடுவதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தையை தெரு நாய்கள் விரட்டி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அப்பகுதியின் சாலை ஓரத்தில் சிறுத்தையின் கால் தடம் பதிந்துள்ளதும் தெரியவந்தது. இதனை வைத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இந்நிலையில், நேற்றிரவு சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று இறந்து கிடந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


    மேலும், வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சிறுத்தையை யாராவது கண்டால் 93608 89724 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இந்த சிறுத்தை திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக வந்திருக்கலாம் என்றும், தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வரும் போது வழி தவறி நகருக்குள் வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதற்காக வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல் துறை ஆகியவை இணைந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டு விடும் என்றனர்.

    வனப்பகுதி எதுவும் அருகில் இல்லாத நிலையில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் மயிலாடுதுறை நகரின் மையமான கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை உலாவும் சம்பவம் அப்பகுதி மக்கள் மனதில் அச்சத்தையும், பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கதண்டுகள் பறந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது
    • 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளிக்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தில் கடந்த சில நாட்களாக கதண்டு கூடு கட்டி இருந்துள்ளது. இந்நிலையில் அக்கிராமத்தில் நடைபெற்ற பால்குட திருவிழாவின் போது வெடி வெடித்ததில் கதண்டுகள் பறந்துள்ளது. அவை நேற்று காலையிலும் பள்ளி வளாகத்தில் பறந்து கொண்டு இருந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கதண்டுகளை தீயிட்டு அழித்தனர். 

    ×