search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பர்கூர் மலைப்பகுதியில்"

    • பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் புதிய பகுதி நேர ரேசன் கடை மற்றும் நடமாடும் ரேசன் கடைகளின் முதல் விற்பனையை ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி மேற்கு மலை தம்முரெட்டி, கொங்காடை பெரியூர் பகுதியில் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் புதிய பகுதி நேர ரேசன் கடை மற்றும் நடமாடும் ரேசன் கடைகளின் முதல் விற்பனையை ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில்.சி.எஸ்.ஆர்.சண்முகம், வருவாய்த்துறை விஜய லட்சுமி,பர்கூர் ஊராட்சி முன்னாள் செயலாளர் ராமதாஸ், கவுன்சிலர் புட்டன், ஒன்றிய இளை ஞரணி துணை அமைப்பா ளர் மாதேஷ், மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், மாதேஷ், கொங்காடை மாதேவன்,

    அப்பை யன், பெஜில் பாளையம் சின்னப்பிசித்தலிங்கம், ஒன்னழகன், மாதேவன், தொள்ளி மாதேவன், ஊசிமலை சண்முகம், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஒரு மணி நேரம் பரவலாக மழை பொழிந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மலைப்பகுதி குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளித்து வந்தது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் ராகி, மக்காச்சோளம், கம்பு, பச்சைப்பயிறு, தட்டப்பயிர் உள்ளிட்ட பயிர்களையும், பருவ நிலைக்கு ஏற்ப மற்ற வகை பயிர்களையும் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றார்கள்.

    இந்த நிலையில் ஒரு சில இடங்களில் மழையை நம்பியே விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வந்தது.

    மேலும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் அந்த மழையினால் மலைப்பகுதி குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளித்து வந்தது.

    இதனைத்தொடர்ந்து நேற்று மாலை ஒரு மணி நேரம் பரவலாக மழை பொழிந்து விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பர்கூர் மலைப்பகுதியில் மழை விடிய விடிய கொட்டியது.
    • இந்த மழை வனப்பகுதியை குளிர வைத்துள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது.

    அக்னி நட்சத்திரம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிவுற்ற நிலையில் வெயி லின் தாக்கம்படிப்ப டியாக குறைய தொடங்கிய வருகிறது. இருப்பினும் சில பகுதிகளில் இன்னும் சதம் அடித்து வரும் வெயிலினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டியது. இதனால் பர்கூர் மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் இந்த மழையினால் மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியுள்ளது.

    வனப்பகுதிகளுக்குள் விலங்குகளுக்கு அமைக்கப்பட்டுள்ள குட்டைகளில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள், வனப்பகுதி களுக்குள்ளேயே தாகத்தை தீர்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 27 நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இந்த மழை வனப்பகுதியை குளிர வைத்துள்ளது.

    ×