search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு"

    காஷ்மீரின் பாராமுல்லாவில் உள்ள சோபோர் பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள சோபோர் கிராமத்தில் வாட்டர்கம் இடத்தில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று போலீசார் பணியில் இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் தங்களிடம் இருந்த கையெறி குண்டுகளை போலீஸ் சோதனை சாவடி மீது வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
    ஜம்மு காஷ்மீரின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் பயங்கரவாதிகள் சீலர் கையெறி குண்டுகளை வீசியதால பரபரப்பு ஏற்பட்டது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வசித்து வருபவர் முஷ்டாக் ஷா. இவர் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

    இன்று அவரது வீட்டின் முன்பகுதியில் உள்ள லானில் பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயமேற்படவில்லை. தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tamilnews
    ×