என் மலர்
செய்திகள்

X
காஷ்மீர் - போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுவீச்சு
By
மாலை மலர்19 July 2018 10:34 AM IST (Updated: 19 July 2018 10:34 AM IST)

காஷ்மீரின் பாராமுல்லாவில் உள்ள சோபோர் பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். #MilitantsAttack
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள சோபோர் கிராமத்தில் வாட்டர்கம் இடத்தில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று போலீசார் பணியில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் தங்களிடம் இருந்த கையெறி குண்டுகளை போலீஸ் சோதனை சாவடி மீது வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
Next Story
×
X