search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்டிகை நாட்கள்"

    • நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது.
    • இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள்.

    நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது. காரசாரமான உணவுகளை விட நாவிற்கு தித்திப்பூட்டும் இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள். தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் நாட்டின் மற்ற பகுதியில் வசிப்பவர்களும் சுவைக்க தூண்டும் அளவிற்கு ருசி மிகுந்தவை. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...

    கொழுக்கட்டை:

    அரிசி மாவு, வெல்லம், தேங்காய் கலந்து நீராவில் வேகவைக்கப்படும் இது அனைத்து தரப்பினரும் விரும்பும் இனிப்பு பலகாரமாக உள்ளது. கொழுக்கட்டையில் பல வகைகள் இருக்கின்றன. இனிப்பு மட்டுமின்றி காரமாகவும் இதனை தயார் செய்து ருசிக்கலாம்.

    மைசூர் பாக்:

    கர்நாடக மாநிலம் மைசூருவில் தயாராகும் இது அதன் பெயரையும் தாங்கி நிற்கிறது. உளுந்தம் பருப்பு, நெய், சர்க்கரை போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இது நாவில் பட்டவுடன் கரைந்துவிடும் தன்மையுடையது. கர்நாடகா மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் இந்தியர்கள் அறிந்திருக்கும் இனிப்பு வகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அரசர் காலத்தில் இருந்தே அதன் தரம், ருசி மாறாமல் இன்றளவும் சுவைக்கப்படுகிறது.

    உன்னியப்பம்:

    கேரளாவில் பிரபலமான இனிப்பு வகையாக விளங்குகிறது. அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லம், வறுத்த எள், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் பொடி போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் இது ஒவ்வொரு வீடுகளிலும் ருசிக்கப்படும் சிற்றுண்டியாக விளங்குகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பரிமாறப்படும் இனிப்பு வகையாக கருதப்படுகிறது.

    ஒப்பாட்டு:

    கர்நாடகாவில் தயாரிக்கப்படும் இது பூரான் போளி என்றும் அழைக்கப்படுகிறது. கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல் போன்றவற்றின் கலவையில் இது உருவாகிறது. போளி வகையிலேயே மாறுபட்ட சுவை கொண்டது. இதனை இனிப்பு பிரெட் என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் திரு விழாக்கள், வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளின்போது இது பரிமாறப்படுகிறது.

    ஜாங்கிரி:

    உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை இது. அதனை நன்றாக வறுத்து பொடித்து சர்க்கரை பாகில் ஊறவைத்து தயாரிக்கப்படுகிறது. மெல்லிய இழைகளாக அச்சுக்களில் வார்க்கப்படும் இது ஆரஞ்சு நிற சாயலில் காட்சி அளிக்கும். தித்திக்கும் இனிப்பு பண்டங்களை விரும்புபவர்கள் ஜாங்கிரியை தவிர்க்கமாட்டார்கள்.

    கடலை மிட்டாய்:

    தமிழ்நாட்டின் பிரபலமான தின்பண்டமாக விளங்கும் கடலை மிட்டாய், வறுத்த வேர்க் கடலை, வெல்லம் சேர்த்து செய்யப்படுகிறது. மொறுமொறுப்பான, மிதமான இனிப்பு சுவை கொண்டது.

    கேசரி:

    ரவை, நெய், சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பு வகையை குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ருசிப்பார்கள்.

    பூதரெகுலு:

    ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இது, அரிசி மாவு, நெய் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படுகிறது. காகித இழை போல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் உலர் பழங்களும் சேர்க்கப்படும். உலர் பழங்கள் சேர்க்கப்படுவதால் இது சத்தான இனிப்பு பொருளாக அறியப்படுகிறது.

    • வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது அனைவரின் வழக்கமாகும்.
    • ஒளிவீசும் இவ்வகை விளக்குகள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

    புதிதாக வீசு கட்டும்போதும், பண்டிகை மற்றும் விஷேச நாட்களிலும் வீட்டை அலங்கரிக்க வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது அனைவரின் வழக்கமாகும். ஒளிவீசும் இவ்வகை விளக்குகள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். இத்தகைய மின்விளக்குகள் அமைக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

    புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு:

    ஹாலின் நடுவில் தங்க நிற விளக்கும். ஹாலின் மூலைப் பகுதிகளில் நீலம், பிங்க், ஊதா என சுவரின் வண்ணத்திற்கு ஏற்ற வகையிலும் மின்விளக்குகளை அமைக்கலாம். படுக்கை அறையில் வெளிர் சில்வர். சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிற விளக்குகளை அமைக்கலாம். பால்கனி மற்றும் வீட்டின் முன்புறம் மஞ்சள். நீலம் அல்லது வெளிர் பச்சை நிற விளக்குகளை அமைக்கலாம்.

    வீட்டின் முன்புறம் மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு குடுவை வடிவ விளக்குகளையும், படுக்கை அறைக்கு தரையுடன் ஒட்டி இருக்கும்படியான மின்மினிப்பூச்சிகள் போல காட்சி அளிக்கும் ஓயர் வடிவ விளக்குகளையும், பால்கனி அல்லது மாடிப்பகுதிக்கு சிறிய வடிவில் இருக்கும் போக்கஸ் வகை மின்விளக்கையும் தேர்ந்தெடுக்கலாம்.

    பண்டிகை காலங்களில்:

    பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிக்க வெளிர் மஞ்சளும், தங்க நிறமும் கலந்த மின்விளக்குகளையே பலரும் தேர்ந்தெடுப்பார்கள். இது மாயாஜாலம் நிறைந்த உலகத்துக்குள் செல்லும் உணர்வை உண்டாக்கும். விட்டிற்கு உயிரோட்டமான அமைப்பு மற்றும் உணர்வை அளிக்கும். பால்கனிக்கு சில்வர் நிற விளக்குகளையும். வீட்டின் திரை, ஜன்னல் மற்றும் மாடிப்படிகளுக்கு ஊதா மற்றும் வெளிர் பிங்க நிற விளக்குகளையும், படுக்கை அறைக்கு மங்கிய மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிற விளக்குகளையும் அமைக்கலாம்.

    ஆன்மிகம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தங்க நிற விலக்கையும், பிறந்த நாள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு நீலம், சிவப்பு மற்றும் பச்சை என கலவையான நிற விளக்குகளையும், வாழ்த்து சொல்லும் நிகழ்வுகளுக்கு ஊதா மற்றும் சில்வர் நிற விளக்குகளையும் அமைக்கலாம். ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஏற்றபடி மின்விளக்கு வடிவங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

    பிறந்தநாள், திருமண நாள் போன்ற வாழ்த்துக்களை பகிரும் நிகழ்வுகளுக்கு செயின் விளக்குகளையும் ஆள்மிக நிகழ்வுகளுக்கு குறைந்தபட்சம் 2 அடி அளவில் இருக்கும் நிளமான விளக்குகளையும், பாரம்பரியம் சார்ந்த பண்டிகை நாட்களுக்கு கிளிப் வடிவிலான எல்.இ.டி. விளக்குகளையும் அமைக்கலாம்.

    குழத்தைகள் இருக்கும் வீட்டில் தனித்தனியாக வயரில் இணைக்கப்பட்டிருக்கும் சீரியல் மின்விளக்குகளுக்கு பதிலாக தொடர்சியாக ஒரு பைப்பிற்குள் மூடி இருக்கும்படியான ரோப் மின்விளக்குகளை பயன்படுத்தலாம். கண்ணாடி மற்றும் பைபர் கிளாஸ் மூலம் கிளிப் மின்விளக்குகள் பாதுகாப்பானவை. அது மட்டுமில்லாமல் இவற்றில் தண்ணீர் பட்டாலும் மின்கசிவு ஏற்படாது.

    ×