search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டேல் சமூகம்"

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திவரும் ஹர்திக் பட்டேல் ராகுல் காந்தி முன்னிலையில் 12-ம் தேதி காங்கிரசில் இணைகிறார். #HardikPatel #joinCongress
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். 

    இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை இவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. 

    இந்நிலையில், ராகுல் காந்தி முன்னிலையில் வரும் 12-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக ஹர்திக் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமை தேர்தலில் போட்டியிடுமாறு உத்தரவிட்டால் போட்டியிடுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #HardikPatel #joinCongress 
    பட்டேல் இனத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய ஒதுக்கீடு கேட்டு தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஹர்திக் பட்டேல் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். #HardikPatel #19days
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

    அவரது போராட்டம் 13-வது நாளை நெருங்கிய நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    காந்திநகர் பகுதியில் உள்ள எஸ்.ஜி.வி.பி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் அங்கும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னரும் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அவர் இன்று இளநீர் அருந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.



    இட ஒதுக்கீடு போராட்டத்தை வென்றெடுக்க நீங்கள் உயிருடன் வாழ வேண்டும் என்று அவரது நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முடிவை ஹர்திக் மாற்றிகொண்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. #HardikPatel #19days
    ×