search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர்கள் பாதிப்பு"

    • விவசாயிகள் வேதனை
    • நெல்லின் விலை உயராமல் உள்ளதாக புகார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பனப்பாக்கம் மற்றும் காவேரிப்பாக்கம் அது சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பான்மையானோர் விவசாயத்தை நம்பி உள்ளனர்.

    பகுதியில் அதிகமாக நெற்பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஒரு சில நெல் ரகங்களில் அதிகமான மூடுபனி காரணமாக நெற்பயிரில் சிவப்பு பூஞ்சை நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    தனால் நெற் பயிர்கள் வளர்ச்சி காணாமல் குன்றி காணப்படுகிறது. மேலும் பச்சையாக இல்லாமல் சிவப்பு ரகமாக காணப்படுகிறது.

    இந்த புதிய வகை நோய் தாக்கத்தால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே நெற்பயிர்களை சாகுபடி செய்வதற்கு உண்டான உர செலவு இடு பொருட்கள் செலவுகள் அதிகமாக உள்ளதாகவும் அதற்கேற்றார் போல் நெல்லின் விலை உயராமல் குறைவாக உள்ளதாகும் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய நோய் தாக்கத்தால் மேலும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

    • மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் நெற்பயிரின் பாதிப்பு குறித்து வயல்வெளிக்கு சென்று ஆய்வு.
    • வேரின் வளர்ச்சி தடைபட்டும், நெற் பயிர் காய்ந்தும் வருகின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் உள்ள மெதுர், சிறுலபாக்கம், குமரன்சேரி அனுப்பம்பட்டு,சிறுவாக்கம் கோளூர்,வேலூர், தத்தை மஞ்சி, சிறுவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் வயலில் தேங்கி உள்ள தண்ணீரில் அதிகஅளவு பச்சை பாசி படர்ந்து வருகிறது. இதனால் வேரின் வளர்ச்சி தடைபட்டும், நெற் பயிர் காய்ந்தும் வருகின்றன.

    இந்த பச்சை பாசியால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் மற்றும் அதிகாரிகள் நெற்பயிரின் பாதிப்பு குறித்து வயல்வெளிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது டில்லி குமார், விவசாயிகளிடம் கூறும்போது, ஏக்கருக்கு 2 கிலோ காப்பர் சல்பேட் உரத்திணை 10 கிலோ மணலுடன் சேர்த்து சீராக தூவினால் பச்சை பாசி வளர்ச்சி தடைப்பட்டு பயிர் சீராக செழித்து வளரும். இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    ×