search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மட்டம் குறைவு"

    கேரளாவில் மழை, வெள்ள பாதிப்புக்குப்பின் நீர் நிலைகள், கிணறுகளில் மளமளவென குறையும் நீர் மட்டம் குறித்து ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. #KeralaStudy #KeralaFloods #RiversDryUp
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாநிலமே நீரில் மூழ்கி தத்தளித்தது.

    அணைகள், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மாநிலத்தின் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    சுமார் 13 நாட்கள் பெரு வெள்ளத்தில் சிக்கி தவித்த கேரளம் இப்போது தான் அந்த பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. தற்போது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் அடிக்கிறது.

    கேரளாவில் கடந்த சில நாட்களாக அடிக்கும் வெயில் மாநில மக்களை மிரள வைத்துள்ளது. பெரு மழைக்கு பின்னர் ஏன் இப்படி வெயில் அடிக்கிறது ? அடுத்து வரும் வெயில் காலத்தில் இதனால் பாதிப்பு ஏற்படுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அதற்கேற்ப தற்போது கேரளாவின் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. கடந்த மாதம் கிணறுகளில் பொங்கி பெருகிய வெள்ளம், இப்போது காணப்படவில்லை. வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து போனது.

    இதுபோல குளங்கள், ஆறுகளில் வழக்கத்தைவிட வெள்ளத்தின் அளவு குறைந்து விட்டது. கேரளாவின் முக்கிய ஆறுகளான பெரியாறு, பாரதப்புழா, பம்பை ஆகிய நதிகள் ஆர்ப்பரித்து பெருகி ஓடியது. இன்று இந்த நதிகளில் வெள்ளம் மிகவும் குறைவாக ஓடுகிறது.

    இதுபோல திடீரென அதிகரித்த வெப்பநிலை காரணமாக விவசாயிகளின் தோழன் என்று அழைக்கப்படும் மண் புழுக்களும் அழிந்து வருகிறது.


    இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் பெருமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு இயல்பு நிலை மாறியுள்ளது. அதோடு இப்போது அங்கு காணப்படும் வெப்பமும், இதனால் ஏற்பட்ட வறட்சியும் இப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இது பற்றி விவசாயிகள் அரசின் வேளாண்மை துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிபுணர்கள் பலர் இது குறித்து ஆய்வு செய்தனர். அவர்கள் கேரளாவின் பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து உள்ளனர்.

    இது குறித்து அறிந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து ஆய்வு செய்ய மத்திய நீர்வள மேலாண்மை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பல்லுயிர் பெருக்கத்தை சீரமைக்க கேரள வனத்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இது தவிர வறட்சிக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய மாநில அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #KeralaStudy #KeralaFloods #RiversDryUp
    ×