search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்ற உத்தரவு"

    • இந்தியாவில் உள்ள 7.4 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
    • மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள 7.4 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில், நாடு முழுவதும் 1.53 லட்சம் வீடுகள் அரசால் இடிக்கப்பட்டுள்ளது என்று ஹவுசிங் அண்ட் லேண்ட் ரைட்ஸ் நெட்வொர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    23 மாநிலங்கள், 4 யூனியன் பிரேதேசங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் நாடு முழுவதும் இடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும், வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், நீதிமன்ற உத்தரவுகளால் சுமார் 3 லட்சம் பேர் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 2022ல், நீதிமன்ற உத்தரவுகளின் விளைவாக 33,360 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், 2023 இல் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

    2022 ஆம் ஆண்டில் 46,371 வீடுகள் இடிக்கப்பட்டு 2.3 லட்சம் பேர் வழுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 2023 ஆம் ஆண்டில் 107, 499 வீடுகள் இடிக்கப்பட்டு 5.15 லட்சம் பேர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

    குர்கான், டெல்லி, அகமதாபாத், அயோத்தி, சூரத் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெரும்பாலான ஏழைகள், தங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான மக்களிடம் அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கும், அவர்களின் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கும் போதுமான காரணங்களை அதிகாரிகள் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • பண்ருட்டி ரங்கநாத பெருமாள் கோவில், மேலப்பாளையம் பெருமாள் கோவில் உற் சவங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.
    • இந்து அறநிலையத் துறையிடம் ஓப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பஸ் நிலையம், இந்திராகாந்தி காலையில் உள்ள இடங்கள் மற்றும் மேலப் பாளையத்தில் உள்ள பல்வேறு இடங்கள் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இதனை குருலட்சுமி அறக்கட்டளை யினர் பராமரித்து வந்த னர். பின்னர் அதனை ரத்து செய்த இந்து அற நிலையத்துறை, தற்போது நேரடியாக நிர்வகித்து வருகிறது. இதில் கிடைக்கும் வாடகை, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், பண்ருட்டி ரங்கநாத பெருமாள் கோவில், மேலப்பாளையம் பெருமாள் கோவில் உற் சவங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். பண்ருட்டி பஸ் நிலை யம் பின்புறம் பல கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் அளவிலான இடத்தில் வாகனங்களை வாடகைக்கு நிறுத்தும் இடம் உள்ளது. இதனை குருலட்சுமி அறக் கட்டளையினர் கணபதி என்பவருக்கு 40 ஆண்டுகள் வாடகைக்கு விட்டு சென்றனர். கணபதி இறந்த பிறகு அவரது வாரிசுகள் வாகனங்களை வாடகைக்கு நிறுத்தும் இடத்தை நிர்வகித்து வருகின்றனர்.

    வாடகை காலம் முடிந்தவுடன் இடத்தை காலி செய்ய இந்து அறநிலையத்துறையினர் நோட்டீஸ் அளித்தனர். நோட்டீசை பெற்றுக் கொண்ட வாடகை தாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 12 நாட்களுக்குள் இடத்தை காலி செய்து, இந்து அறநிலையத் துறையிடம் ஓப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்தி ரன் தலைமையில் செயல் அலுவலர்கள், ஆய்வா ளர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்கள் வாகனங் களை வாடகைக்கு நிறுத் தும் இடத்திற்கு இன்று காலை 7 மணிக்கு வந்தனர். இதையடுத்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜ தாமரை பாண்டியன், கண் ணன், நந்தகுமார், சீனி வாசன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசாரும் அங்கு வந்தனர். நீதிமன்ற உத்தரவின் படி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனகளான, பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிள் போன்றவைகளை அதிரடி யாக அகற்றி அப்புறப் படுத்தினர். அங்கிருந்த கடைகளை காலி செய்த னர். கடைகளை மூடி சீல் வைத்தனர். இத்தகவல் அறிந்து இடத்தை வாடகைக்கு எடுத்த கணபதியின் வாரிசு கள் 100-க்கும் மேற்பட்ட வர்களுடன் அங்கு திரண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி நகரப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×