search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் பல கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் இடம் மீட்பு: இந்து அறநிலையத்துறையினர் அதிரடி
    X

    பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்திலிருந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல்வைத்த போது எடுத்தபடம்.

    பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் பல கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் இடம் மீட்பு: இந்து அறநிலையத்துறையினர் அதிரடி

    • பண்ருட்டி ரங்கநாத பெருமாள் கோவில், மேலப்பாளையம் பெருமாள் கோவில் உற் சவங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.
    • இந்து அறநிலையத் துறையிடம் ஓப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பஸ் நிலையம், இந்திராகாந்தி காலையில் உள்ள இடங்கள் மற்றும் மேலப் பாளையத்தில் உள்ள பல்வேறு இடங்கள் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இதனை குருலட்சுமி அறக்கட்டளை யினர் பராமரித்து வந்த னர். பின்னர் அதனை ரத்து செய்த இந்து அற நிலையத்துறை, தற்போது நேரடியாக நிர்வகித்து வருகிறது. இதில் கிடைக்கும் வாடகை, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், பண்ருட்டி ரங்கநாத பெருமாள் கோவில், மேலப்பாளையம் பெருமாள் கோவில் உற் சவங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். பண்ருட்டி பஸ் நிலை யம் பின்புறம் பல கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் அளவிலான இடத்தில் வாகனங்களை வாடகைக்கு நிறுத்தும் இடம் உள்ளது. இதனை குருலட்சுமி அறக் கட்டளையினர் கணபதி என்பவருக்கு 40 ஆண்டுகள் வாடகைக்கு விட்டு சென்றனர். கணபதி இறந்த பிறகு அவரது வாரிசுகள் வாகனங்களை வாடகைக்கு நிறுத்தும் இடத்தை நிர்வகித்து வருகின்றனர்.

    வாடகை காலம் முடிந்தவுடன் இடத்தை காலி செய்ய இந்து அறநிலையத்துறையினர் நோட்டீஸ் அளித்தனர். நோட்டீசை பெற்றுக் கொண்ட வாடகை தாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 12 நாட்களுக்குள் இடத்தை காலி செய்து, இந்து அறநிலையத் துறையிடம் ஓப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்தி ரன் தலைமையில் செயல் அலுவலர்கள், ஆய்வா ளர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்கள் வாகனங் களை வாடகைக்கு நிறுத் தும் இடத்திற்கு இன்று காலை 7 மணிக்கு வந்தனர். இதையடுத்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜ தாமரை பாண்டியன், கண் ணன், நந்தகுமார், சீனி வாசன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசாரும் அங்கு வந்தனர். நீதிமன்ற உத்தரவின் படி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனகளான, பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிள் போன்றவைகளை அதிரடி யாக அகற்றி அப்புறப் படுத்தினர். அங்கிருந்த கடைகளை காலி செய்த னர். கடைகளை மூடி சீல் வைத்தனர். இத்தகவல் அறிந்து இடத்தை வாடகைக்கு எடுத்த கணபதியின் வாரிசு கள் 100-க்கும் மேற்பட்ட வர்களுடன் அங்கு திரண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி நகரப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×