search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலக்கரி சுரங்க விபத்து"

    • நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது.
    • இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தின் பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என போலீசார் தெரிவித்தனர்.

    • சுரங்க வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்தது.
    • மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    அங்காரா:

    துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.

    இந்நிலையில், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 தொழிலாளர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
    • மேலும் இடிபாடுகளில் சிக்கிய 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    அங்காரா:

    துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.

    இந்நிலையில், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுரங்கத்திற்குள் சிக்கிய எஞ்சியோரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    • சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிய 14 தொழிலாளர்கள் பலியாகினர்.
    • மேலும் இடிபாடுகளில் சிக்கிய 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    அங்காரா:

    துருக்கியின் வடக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், சுரங்க வெடி விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர் என உள்துரை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுரங்கத்தினுள் சிக்கிய 20 பேரை மீட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    மீத்தேன் வாயு உருவானதே வெடி விபத்துக்கு காரணம் என சுரங்கத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×