search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியாயவிலை"

    • நியாயவிலை கடை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு அதிகாரி தெரிவித்தார்.
    • (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிக்கு விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் நியாய விலை கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 114 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து www.drbramnad.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதா

    ரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில்

    (www.drbramnad.net) வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களு க்கான அறிவுரைகளை கவனமாக கொண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மேலும் விற்பனையாளர் பணியிடத்திற்காக இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிப்பது தொடர்பாக

    https://youtube/G6c5e2ELJD8 என்ற வளையொளி

    (youtube Channcl - TNCOOP DEPT) தளத்தில் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

    விண்ணப்பிக்கும் முறைகுறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் drbpdsramnad@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவிமைய தொலைபேசி எண் 04567-230950 வாயிலாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் மேற்காணும் வளையொளி (யூ-டியூப்) தளத்தினை பயன்படுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிக்கு விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையம் அருகே நியாயவிலை கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
    • இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள முத்துசாமியாபுரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைய இருக்கும் நியாய விலை கடை கட்டித்திற்கான பூமி பூஜை நடந்தது.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து பொதுநிதியிலிருந்து ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கணேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×