search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவாஸ் செரீப்"

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பை அவரது கட்சியினர் வீட்டில் இருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். பேரணியில் ஏராளமான கார்கள் மற்றும் லாரிகள் இடம் பெற்றன. #NawazSharif
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

    உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 26-ந்தேதி முதல் 6 வாரத்துக்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    அதன் பின்னர் தனக்கு நிரந்தர ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    இதற்கிடையே அவரது ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே அவர் கோட் லக்பத் சிறைக்கு மீண்டும் திரும்பினார். 

    அவரை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் வீட்டில் இருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். பேரணியில் ஏராளமான கார்கள் மற்றும் லாரிகள் இடம் பெற்றன.



    முன்னால் சென்ற காரில் நவாஸ்செரீப் அமர்ந்து இருந்தார். அவருடன் மகள் மரியம், தம்பி மகன் ஹம்சா ஷெபாஸ் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பட்டாசு மற்றும் வாண வேடிக்கை நடத்தப்பட்டது.

    பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களில் கலந்து கொண்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரணி இரவில் ஜெயிலை சென்று அடைந்ததும், சிறை அதிகாரிகளிடம் நவாஸ் ஒப்படைக்கப்பட்டார். #NawazSharif
    உடல்நலம் தேறியதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மருத்துவமனையில் இருந்து லாகூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார். #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    அல்-அஜீதா இரும்பாலை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை நடத்தியது. அப்போது அவருக்கு இருதயநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குணமாகாமல் தொடர்ந்து அவர் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு பரிந்துரை செய்தது.

    நவாஸ் செரீப் சார்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறையில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், உடல்நலம் தேறியதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மருத்துவமனையில் இருந்து லாகூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார் என அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார். #NawazSharif
    நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    அல்-அஜீதா இரும்பாலை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை நடத்தியது. அப்போது அவருக்கு இருதயநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குணமாகாமல் தொடர்ந்து அவர் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு பரிந்துரை செய்தது.

    இந்த நிலையில் நவாஸ் செரீப் வக்கீல் கவாஜா ஹாரீஸ் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்புக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை வருகிற பிப்ரவரி 18-ந்தேதி நடைபெற உள்ளது. எனினும் “நவாஸ்செரீப்பின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதால் அவருக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

    சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. #NawazSharif #Pakistan
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த மாதம் 24-ந் தேதி தீர்ப்பளித்தது.

    இதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நவாஸ் செரீப்புக்கு இதய நோய் பாதிப்பு இருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பின் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நவாஸ் செரீப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக அவரது டாக்டரும், இருதய நோய் நிபுணருமான அட்னன் கான் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    நவாஸ் செரீப்பின் இருதய நோய் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது. எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    நவாஸ் செரீப்பை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என்று ஏற்கனவே மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரையை அரசு ஏற்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #NawazSharif #Pakistan
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்த தீர்ப்புக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. #PakistanSC #SCdismissesdismisses #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
     
    இவ்வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் செரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார்.

    இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பொறுப்புடைமை நீதிமன்றம் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதாக தனது தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டி இருந்தார். இதையடுத்து, அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொறுப்புடைமை நீதிமன்றம் மேல் முறையீடு செய்தது. 

    இவ்வழக்கு நீதிபதி அசீப் சையத் கோசா முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னர் இஸ்லாமாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதி பொறுப்புடைமை நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 

    முன்னதாக, நவாஸ் செரீபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு என மேலும் இரு ஊழல் வழக்குகள் நடைபெற்று வந்தன. 

    இவ்வழக்குகளில் 24-12-2018 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் செரீப்பை விடுவித்தும், அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அர்ஷத் முஹம்மத் மாலிக் உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்பையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanSC #SCdismissesdismisses #NawazSharif  #NawazSharifgraftcase #NawazSharifsentence 
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு எதிரான இரு ஊழல் வழக்குகளில் ஒரு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மற்றொரு வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #NawazSharif #Nawazimprisonment
    இஸ்லாமாபாத்:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
     
    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் செரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.

    இதற்கிடையில், நவாஸ் செரீபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு என மேலும் இரு ஊழல் வழக்குகள் நடைபெற்று வந்தன.

    இவ்வழக்குகளில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் செரீப்பை விடுவித்தும், அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி அர்ஷத் முஹம்மத் மாலிக் உத்தரவிட்டார்.

    அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் நவாஸ் செரீபுக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளதால் இந்த தண்டனை விதிக்கப்படுவதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். #FormerPakistanPM #NawazSharif #Nawazimprisonment #AlAziziacase
    நவாஸ் செரீப்-மகள் மரியம் ஜாமீனில் வெளியே வந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க பாகிஸ்தானில் புதிதாக பதவி ஏற்றுள்ள இம்ரான்கான் அரசு தடை விதித்துள்ளது. #NawazSharif #PakistanPM #ImranKhan

    இஸ்லாமாபாத்:

    பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் தண்டனையும், மருமகன் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. தற்போது இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தால் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க பாகிஸ்தானில் புதிதாக பதவி ஏற்றுள்ள இம்ரான்கான் அரசு தடை விதித்துள்ளது.

    அதற்காக வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருவரது பெயர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.


    மேலும் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள நவாஸ் செரீப்பின் மகன்கள் ஹசன், உசைன் மற்றும் முன்னாள் நிதி மந்திரி இஷாக்தர் ஆகியோரை தலைமறைவு குற்றவாளிகள் என அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.

    அவர்களை பாகிஸ்தானுக்கு கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியிடவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் இஸ்லாமாயத்தில் நேற்று நடந்தது. அதில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் தொடர்பு மந்திரி பாவத்கான் தெரிவித்தார்.

    இது தவிர பொருளாதார பிரச்சினைகள் மற்றும் அவற்றை சமாளிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய சிக்கன நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. #NawazSharif #PakistanPM #ImranKhan 

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு லண்டனில் வைத்து சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பனாமா ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பும், அதை தொடர்ந்து நெஞ்சு வலியும் ஏற்பட்டது.

    இதனால் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அறிவியல் மருத்துவ நிறுவன ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, இருதய சிகிச்சை பிரிவில் நவாஸ் செரீப் அங்கு சிகிச்சை பெறும் வார்டு கிளை சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிகிச்சை முடியும் வரை நவாஸ் செரீப் தங்கியிருக்கும் வார்டு கிளை சிறையாக செயல்படும் என இஸ்லாமாபாத் தலைமை கமி‌ஷனர் நேற்று அறிவித்தார்.


    இதற்கிடையே, இங்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதிலும் நவாஸ் செரீப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

    எனவே, அவரது தனிப்பட்ட குடும்ப டாக்டர் அட்னன் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்தார். பின்னர் அவரை லண்டன் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கலாம் என பரிந்துரை செய்தார்.

    எனவே, அவருக்கு லண்டனில் வைத்து சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அனேகமாக வருகிற 2-ந் தேதி அவர் லண்டன் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #NawazSharif #Sharifhospitalward #NawazSharifsubjail
    வெளிநாட்டில் இருந்து திரும்பியதால் கட்சியை அழிவில் இருந்து நவாஸ் செரீப் காப்பாற்றி விட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #PakistanElection #NawazSheriff

    இஸ்லாமாபாத்:

    பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப், அவரது மகள் மரியம், மருமகன் உள்ளிட்டோருக்கு பொறுப்புடைமை கோர்ட்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    அப்போது நவாஸ்செரீப்பும், மரியமும் லண்டனில் தங்கி இருந்தனர்.

    பிரசாரம் சூடு பிடித்து இருந்த நிலையில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் திரும்பி அவர்கள் கைது ஆனார்கள். இத்தகைய நடவடிக்கையின் மூலம் அரசியல் சூதாட்டத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார் என சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அவர் தானாக வந்து கைது ஆனதன்மூலம் தனது கட்சியை அழிவில் இருந்து நவாஸ் செரீப் காப்பாற்றி விட்டார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தான் திரும்பியதன் மூலம் அவர் சட்ட பிரச்சினையில் இருந்து மட்டும் தப்பிக்கவில்லை. தனது அரசியல் எதிர்காலத்தையும், மகள் மரியத்தின் அரசியல் விதியையும் அவர் காப்பாற்றி விட்டார்.

    வெளிநாட்டிலேயே தொடர்ந்து தங்கியிருந்தால் மக்களின் நம்பிக்கையை அவரால் பெற்று இருக்க முடியாது. தற்போது பாராளுமன்ற தேர்தலில் பாதி இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார். பாகிஸ்தான் திரும்பாமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு கூட வெற்றி பெற்று இருக்க முடியாது. கட்சியே அழிந்து இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவாஸ் செரீப் கட்சி வெற்றி பெற்றது. அதை எதிர்த்து இம்ரான்கான் போராட்டம் நடத்தினார். தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி இஸ்லாமாபாத் ஸ்தம் பிக்கும் வகையில் 4 மாதங்கள் போராட்டம் நடத்தி அவருக்கு நெருக்கடி கொடுத்தார்.

    2014-ம் ஆண்டில் பெஷாவர் ராணுவ பள்ளி யில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் கொல்லப்பட்டனர். அதன் மூலமும் நவாஸ்செரீப்புக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    பனாமா ஊழல் வழக்கில் நவாஸ்செரீப் குடும்பத்துக்கு எதிராக இம்ரான்கான் போராட்டம் நடத்தினார். அதனால் தான் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. #PakistanElection #NawazSheriff

    சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், மகள், மருமகன் சார்பில் இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் 7 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    இஸ்லாமாபாத்:

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் ஷரிப் சார்பில் நாளை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

    லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்ய  நவாஸ் ஷரிப்பின் வழக்கறிஞர்கள் தீர்மானித்தனர்.

    முன்னதாக, நேற்று முன்தினம் அடிடாலா சிறைக்கு சென்ற காவாஜா ஹாரிஸ் தலைமையிலான வழக்கறிஞர்கள் முறையீட்டு மனுக்களில் தங்களது கட்சிக்காரர்களின் கையொப்பங்களை பெற்றனர்.

    தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நவாஸ் ஷரிப் மீதுள்ள மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணையை அடிடாலா சிறை வளாகத்தில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    நிலுவையில் இருக்கும் மேலும் இரு ஊழல் வழக்குகளை தற்போதைய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர் விசாரிக்க கூடாது. ஏற்கனவே, இந்த வழக்குகளின் சாதக-பாதகங்கள் பற்றி அவர் வெளிப்படையாக பொதுவெளியில் விமர்சித்துள்ளதால் முஹம்மது பஷீருக்கு வேறு நீதிபதியிடம் இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நவாஸ் ஷரிப், மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் சப்தர் சார்பில் இன்று 7 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் தேதியை இஸ்லாமாபாத் ஐகோர்ட் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Sharifconvictionappeal #graftcase #Avenfieldverdictappeal
    நவாஸ் செரீப் தம்பி உள்பட 1500 பேர் மீது போலீசார் பயங்கரவாத வழக்கு பதிவு செய்துள்ளனர். #NawazSharif

    லாகூர்:

    பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டும், அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டும் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் லண்டனில் இருந்து நேற்று முன்தினம் திரும்பிய இவர்கள் இருவரும் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    முன்னதாக லண்டனில் இருந்து திரும்பும் அவர்களை வரவேற்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் லாகூர் விமான நிலையத்துக்கு பேரணியாக செல்ல தயார் நிலையில் இருந்தனர். ஆனால் லாகூர் நகரம் முழுவதையும் போலீசார் சீல் வைத்தனர்.

    144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் குவிந்து லாகூர் விமான நிலையம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை அங்கு திரண்டு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நவாஸ்செரீப் கட்சி தொண்டர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்தும் எரிக்கப்பட்டது.

    இது தொடர்பாக நவாஸ் செரீப் கட்சி தொண்டர்கள் 1,500 பேர் மீது போலீசார் தீவிரவாத வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் நவாஸ் செரீப் தம்பியும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான ஷாபாஸ் செரீப் மற்றும் முன்னாள் பிரதமர் ஷாகித் ஷாகித்கான் அப்பாசி உள்பட 20 தலைவர்களும் அடங்குவர்.

    நவாஸ் செரீப் தம்பி ஷாபாஸ் செரீப் கட்சி தலைவராகவும் இருக்கிறார். இவர் தலைமையில் தான் வரவேற்பு பேரணி நடைபெற்றது.

    பாகிஸ்தானின் எதிர்காலத்தை மாற்றுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நவாஸ் ஷரிப், இளம் தலைமுறையினருக்காக சிறை செல்லும் தியாகத்தை ஏற்பதாக குறிப்பிட்டுள்ளார். #Pakistanfuture #Nawaz
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷரிப், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியையும் இழந்தார்.

    அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு அப்போது உத்தரவிட்டது.

    இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ‘அவென்பீல்டு’ வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த கோர்ட்டு முடிவு செய்தது. 

    அதைத் தொடர்ந்து நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதற்கிடையே லண்டன் நகரில் புற்றுநோயால் அவதியுற்று வருகிற மனைவி குல்சூம் நவாசை சந்திப்பதற்காக நவாஸ் ஷரிப் மகள் மரியம் நவாசுடன் அங்கு சென்றார்.

    அங்கு குல்சூம் நவாஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவாஸ் ஷரிப், மகள் மரியம் நவாசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பாகிஸ்தான் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    லண்டனில் இருந்து அபுதாபி சென்ற நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் புறப்பட்டு வந்துகொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே லாகூர் அல்லது இஸ்லாமாபாத்தில் விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷரிப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்ய தேசிய பொறுப்புடைமை முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அவர்களை கைது செய்து ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு முடிவு செய்து, ஏற்பாடு ஆகி உள்ளது.

    நவாஸ் ஷெரீப்பையும், மரியம் நவாசையும் கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று லாகூர் விமான நிலையத்திலும், மற்றொன்று இஸ்லாமாபாத் விமான நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பாகிஸ்தானின் எதிர்காலத்தை மாற்றுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நவாஸ் ஷரிப், இளம் தலைமுறையினருக்காக சிறை செல்லும் தியாகத்தை ஏற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மரியம் நவாஸ் இன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பேசியுள்ள நவாஸ் ஷரிப், ‘நாட்டின் எதிர்காலத்தை நாம் மாற்ற வேண்டும். இந்த வாய்ப்பு மீண்டும் ஒருமுறை கிடைக்காது. என்னால் இயன்றவற்றை எல்லாம் நான் செய்து விட்டேன்.

    எனக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதையும், நான் நேரடியாக சிறைக்கு கொண்டு செல்லப்படுவேன் என்பதையும் நான் அறிவேன். உங்களுடைய வருங்கால சந்ததியினருக்காகவும், பாகிஸ்தானின் எதிர்காலத்துக்காகவும் இந்த தியாகத்தை நான் செய்கிறேன். என்னுடையை ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் துணையாக இருந்து ஆதரிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #Pakistanfuture  #Nawaz 
    ×