search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலவாரியம்"

    • அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தால் பல லட்சக்கணக்கானவர்கள் நிவாரண உதவிகளை பெற்றுள்ளனர்.
    • கணவரை இழந்த திவ்யாவுக்கு மாநகராட்சியில் தற்காலிக பணி ஆணை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தொ.மு.ச.பேரவையின் உட்பிரிவுகளின் ஒன்றான , தமிழ்நாடு மோட்டார் வாகன முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர், ஓட்டுநர் விஜய் என்ற இளைஞர் அண்மையில் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், அவரது மனைவி திவ்யாவிடம் அரசின் உதவித்தொகை ரூ.2 லட்சத்தை தொ.மு.ச. பேர வையின் அகில இந்திய பொதுச்செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் வழங்கினார்.தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது கணவரை இழந்த திவ்யாவுக்கு மாநகராட்சியில் தற்காலிக பணி வழங்கும் வகையில், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் பணி ஆணையையும் வழங்கினார்.

    இது குறித்து தொ.மு.ச. பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. அளித்த பேட்டியில்:-

    கருணாநிதியால் உருவாக்கப்பட்ட அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தால் பல லட்சக்கணக்கானவர்கள் நிவாரண உதவிகளை பெற்றுள்ளனர். நல வாரியத்தை தொடக்கி தொழிலாளர்களின் குடும்பங்களை காத்தவர் கருணாநிதி என்றார்.

    இந்நிகழ்வில் கரந்தை பகுதி தி.மு.க செயலாளர் கார்த்திகேயன், தொ.மு.ச.மா வட்ட கவுன்சில் செயலாளர் சேவியர், உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் சாக்ரட்டீஸ், லாரன்ஸ், காதர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட சி.ஐ.டி.யு. மாநாட்டில் அரசை வலியுறுத்தி தீர்மானம்
    • கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட சி. ஐ. டி. யு. சுமை பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு வெட்டூர்ணிமடத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று நடந்தது. தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார். மாநில குழு அந்தோணி தொடக்க உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாநில தலைவர் பெருமாள், மாநிலகுழு சித்ரா, சந்திரகலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முருகன், துரைமணி, சந்திரபோஸ், குணசேகரன், பரமசிவம், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கேரள மாநிலத்தை போல் சுமை பணி தொழிலுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், குமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் கல், ஜல்லி, மணல், எம்.சான்ட் போன்ற கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் டாஸ் மார்க்கில் வேலை பார்க்கும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரிசி உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×