search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடத்தையில் சந்தேகம்"

    • கணவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி, ஜூன்.17-

    அருமனையை அடுத்த அண்டுகோடு, ஈந்திகாலை பகுதியை சேர்ந்தவர் கிஷோர். கார் டிரைவர்.

    இவரது மனைவி சகி (வயது 42). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். மனைவியின் நடத்தையில் கிஷோருக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சகியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சகி, தனது மகளுடன் வீட்டில் உள்ள ஒருஅறையில் தனியாக படுப்பது வழக்கம்.

    வழக்கம் போல நேற்றிரவும் சகி வீட்டில் உள்ள தனி அறையில் படுக்க சென்றார். அவருடன் மகளும் தூங்கினார். இன்று அதிகாலை இவர்களின் அறையில் இருந்து கரும்புகை வந்தது.

    அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி சென்றனர். வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அங்கு சகி தீயில் கருகி பிணமாக கிடந்தார்.

    சகியின் மகள் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் அருமனை போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சகியின் சாவுக்கு காரணம் என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    ×