search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி நிர்வாகம்"

    • கேபிள் ஆபரேட்டர்களால் தொகை செலுத்தப்பட வேண்டும்.
    • சர்வீஸ் ஏரியா விபரங்களுடன் அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் தாறுமாறாக அமைக்க ப்பட்டுள்ள கேபிள் வயர்கள் மற்றும் இன்ட ர்நெட் இணைப்பு நிறுவ னங்களை கட்டுப்படுத்தும் வகையில்நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    உடுமலை நகராட்சி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தெருக்கள் மற்றும் இதர தெருக்களில் தமிழ்நாடு நகராட்சிகள் தொலைக்காட்சி வடங்கள் நிறுவுதல் வரையறை விதிகள் 2000 ல் திருத்தப்ப ட்ட விதிகளின் படி நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தளவாடகை ஒவ்வொரு வருடமும் கிலோமீட்டர் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களால் தொகை செலுத்தப்பட வேண்டும்.மேலும் தனியார் தொலை த்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் இன்டர்நெட் இணைப்பு வழங்குபவர்கள் நகராட்சி மற்றும் இதர சாலைகளில் எடுத்துச் செல்வதற்கான தள வாடகை ஆண்டொ ன்றுக்கு கிலோமீட்டர் கணக்குப்படி செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாத கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தனியார் தொலைத் தொ டர்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் இன்டர்நெட் இணைப்பு வழங்குபவர்கள் உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த வேண்டும்.மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றிருந்தால் அதற்கான கடிதத்தை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இது சம்பந்தமான கலந்தா ய்வுக் கூட்டம் வருகிற 17 -ந் தேதி மாலை 4 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற உள்ளது.எனவே அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் மற்றும் இதர இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் தங்களுடைய சர்வீஸ் ஏரியா விபரங்க ளுடன் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.நகராட்சிக்கு கட்டணம் செலுத்த தவறும் பட்சத்தில் அனுமதி பெறாத கேபிள் வடங்கள், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கேபிள் வடங்கள் மற்றும் தனியார் இன்டர்நெட் கேபிள்கள் ஆகியவை முன் அறிவிப்பு ஏதும் இன்றி நகராட்சியால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனுமதிக்கு மாறாக போக்குவரத்துக்கும் மழைநீர் செல்ல இடையூறா கவும் மற்றும் மின்கம்ப ங்களில் உரசும் நிலையில் நிறுவப்பட்டுள்ள கம்பங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சாலை,தளி சாலை,சதாசிவம் சாலை, வடக்கு குட்டை தெரு மற்றும் நெல்லு கடை வீதி ஆகிய தெருக்களில் சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கம்பி வடங்களை தேர் பவனிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அகற்றிக் கொள்ளுமாறு அறிவிக்க ப்படுகிறது என்று உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள பாக்கி தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.
    • குடிநீர் இைணப்பு துண்டிக்கப்படும்.

    புன்செய்ப்புளியம்பட்டி:

    புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிருப்பதாவது:-

    புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, கடை வாடகை, ஆண்டு குத்தகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் முன்அறிவிப்பு இன்றி தங்களுடையை குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.
    • நகராட்சி நிர்வாகத்தினர் 17 கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பஸ் நிலையம். பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடைகளின் உரிமம் புதுப்பிக்கவில்லை, எனக்கூறி, நேற்று நகராட்சி நிர்வாகத்தினர் 17 கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.

    இதுகுறித்து பஸ்நிலைய கடை உரிமையாளர்கள் கூறியதாவது. "கொரோனா " ஊரடங்கின் போது சுமார் 6 மாதங்களுக்கு மேல், கடைகள் திறக்கப்படவில்லை மேலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு முழுமையாக கடைகள் செயல்படவில்லை, இந்த நிலையில், பல்லடம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சரிவர வருவதில்லை, இதனால் எங்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம், தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, உரிமம் புதுப்பிக்க கடை வாடகை உடன் 15 சதவீதம் வாடகையை உயர்த்தி கட்ட வேண்டும் என்று சொல்கின்றனர். ஏற்கனவே உள்ள வாடகை கட்ட முடியாமல் விழி பிதுங்கிய நிலையில் உள்ளோம். இந்த நிலையில் வாடகை உயர்த்தி கட்டுவது என்பது எங்களால் முடியாத காரியம் எனவே நகராட்சி நிர்வாகம், எங்களது வாழ்வாதாரத்தை மனதில் வைத்து கொரோனா கால ஊரடங்கின் போது வாடகை கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்,மேலும் கடைகளின் வாடகையை குறைக்கவும், இரவு 7மணிக்கு மேல் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது. கடை உரிமம் 31.7.22 அன்று முடிவடைகிறது. உரிமம் புதுப்பிக்க கோரி கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கு அறிவுறுத்தியும், உரிமம் புதுப்பிக்க வில்லை, நிலுவையில் உள்ள வாடகையும் செலுத்தப்படவில்லை, அதனால் கடைகள் பூட்டப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டப்பட்டதால், பயணிகள் குளிர்பானம், தின்பண்டம், உள்ளிட்ட பொருட்கள் வாங்க பஸ் நிலையத்திற்கு வெளியே சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்பட்டனர்.

    ×