search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பஸ் நிலையத்தில் உரிமம் புதுப்பிக்காத கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் தடை
    X

    கோப்புபடம்.

    பல்லடம் பஸ் நிலையத்தில் உரிமம் புதுப்பிக்காத கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் தடை

    • பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.
    • நகராட்சி நிர்வாகத்தினர் 17 கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பஸ் நிலையம். பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடைகளின் உரிமம் புதுப்பிக்கவில்லை, எனக்கூறி, நேற்று நகராட்சி நிர்வாகத்தினர் 17 கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.

    இதுகுறித்து பஸ்நிலைய கடை உரிமையாளர்கள் கூறியதாவது. "கொரோனா " ஊரடங்கின் போது சுமார் 6 மாதங்களுக்கு மேல், கடைகள் திறக்கப்படவில்லை மேலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு முழுமையாக கடைகள் செயல்படவில்லை, இந்த நிலையில், பல்லடம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சரிவர வருவதில்லை, இதனால் எங்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம், தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, உரிமம் புதுப்பிக்க கடை வாடகை உடன் 15 சதவீதம் வாடகையை உயர்த்தி கட்ட வேண்டும் என்று சொல்கின்றனர். ஏற்கனவே உள்ள வாடகை கட்ட முடியாமல் விழி பிதுங்கிய நிலையில் உள்ளோம். இந்த நிலையில் வாடகை உயர்த்தி கட்டுவது என்பது எங்களால் முடியாத காரியம் எனவே நகராட்சி நிர்வாகம், எங்களது வாழ்வாதாரத்தை மனதில் வைத்து கொரோனா கால ஊரடங்கின் போது வாடகை கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்,மேலும் கடைகளின் வாடகையை குறைக்கவும், இரவு 7மணிக்கு மேல் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது. கடை உரிமம் 31.7.22 அன்று முடிவடைகிறது. உரிமம் புதுப்பிக்க கோரி கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கு அறிவுறுத்தியும், உரிமம் புதுப்பிக்க வில்லை, நிலுவையில் உள்ள வாடகையும் செலுத்தப்படவில்லை, அதனால் கடைகள் பூட்டப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டப்பட்டதால், பயணிகள் குளிர்பானம், தின்பண்டம், உள்ளிட்ட பொருட்கள் வாங்க பஸ் நிலையத்திற்கு வெளியே சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்பட்டனர்.

    Next Story
    ×