search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் துறையினர்"

    • கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது.
    • இந்த போராட்டத்தால் அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

     பல்லடம்:

    கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பு சார்பில் மின் கட்டணம் ரூ.380ஆக இருந்ததை 550 உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் எனவும், பீக் ஹவர் நேர கட்டணம் மற்றும் சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரணம்பேட்டை பகுதியில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காததால் தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 25-ந்தேதி ஒருநாள் மட்டும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் அடுத்த கட்ட போராட்டமாக நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் கோரிக்கை மனு அளிப்பது எனவும், தொடர்ந்து 16-ந்தேதி அன்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் எனவும் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் அஸ்வத் முருகேசன் தெரிவித்தார்.

    • இடைத்தரகர்கள் மூலமே பெரும்பாலும் துணிகள் விற்பனை நடந்து வருகிறது.
    • பல்லடம், அவிநாசி, ஈரோடு என பல்வேறு பகுதி போலீஸ் நிலையங்களிலும் மோசடி கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்து வரும் நகரத்தில்திருப்பூர், பல்லடம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல லட்சங்களில் முதலீடு செய்து உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி வரை கொண்டு செல்ல தொழில்துறையினர் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

    சமீப காலமாக மோசடி செய்யும் கும்பல் ஒன்று, தொழில் துறையினரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி கொண்டு தலைமுறைவாகி வருவது அதிகரித்துள்ளது.

    இது குறித்துதிருப்பூரை சேர்ந்த தொழில் துறையினர் சிலர் கூறியதாவது:-

    இடைத்தரகர்கள் மூலமே பெரும்பாலும் துணிகள் விற்பனை நடந்து வருகிறது. அவ்வாறு லட்சக்கணக்கான மதிப்பிலான துணிகளை பெற்றுச்செல்லும் சில இடைத்தரகர்கள், பணத்துடன் கம்பி நீட்டுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக ஈரோட்டைச் சேர்ந்த தந்தை மகன் என இருவர், இடைத்தரகர்களாக செயல்பட்டு பல கோடிகள் சுருட்டி மோசடி செய்துள்ளனர்.

    கடந்த4ஆண்டுக்கு முன் பல்லடம், அவிநாசி வட்டார பகுதிகளில் 60க்கும் மேற்பட்டவர்களிடம், துணிகளை பெற்றுக்கொண்டு ரூ. 4.75 கோடி, ஈரோட்டை சேர்ந்தவரிடம், ரூ.3.75 கோடி , பல்லடத்தை சேர்ந்த இருவரிடம்ரூ.1.68 கோடி , அவிநாசியை சேர்ந்தவரிடம் 90 லட்சம் ரூபாய் என பல கோடிகள் மோசடி செய்துள்ளனர்.ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்கள், செல்போன் எண்கள் பயன்படுத்தி மோசடியை அரங்கேற்றி உள்ளனர். நம்பிக்கை காரணமாக துணிகளை கொடுத்து ஏமாறும் பலர் புகார் அளிக்க வருவதில்லை.இருப்பினும், பல்லடம், அவிநாசி, ஈரோடு என பல்வேறு பகுதி போலீஸ் நிலையங்களிலும் மோசடி கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடி ஆசாமிகளால், தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் புகார் அளிக்கவும் வழியின்றி, எண்ணற்ற தொழில் துறையினர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 15-ந் தேதிக்குள் தொழில் துறையினர் கருத்து தெரிவிக்கவேண்டும்.
    • பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    திருப்பூர் :

    ஜவுளித்துறை உற்பத்தி நிறுவனங்களின் எந்திர முதலீடுகளுக்கு மானியம் வழங்கும் புதிய உற்பத்தி சார் ஊக்க தொகை திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. வரைவு நிலையில் உள்ள இந்த திட்டம் குறித்து வரும் 15-ந் தேதிக்குள் தொழில் துறையினர் கருத்து தெரிவிக்கவேண்டும்.

    மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், ஏ-டப்' என்ற திருத்தி அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்துக்கு மாற்றாக, பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. புதிய திட்டத்துக்கான வரைவு அறிக்கை, கடந்த 3-ந் தேதி வெளியிடப்பட்டது.வரைவு அறிக்கை குறித்து அனைத்து ஜவுளித்துறையினரும் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஜவுளி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஆடிட்டர் அரசப்பன் கூறியதாவது:- பி.எல்.ஐ., என்கிற புதிய திட்டத்தில் ஜவுளி உற்பத்தி எந்திரங்களின் முதலீடுகளுக்கு அதன்மூலம் அடையும் விற்பனை இலக்கு அடிப்படையில் மானியம் வழங்கப்படும். மானிய ஊக்கத்தொகை 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக வழங்கப்படும். எந்திரம் கொள்முதல் செய்த முதல் ஆண்டில், எந்திரத்தின் முதலீட்டு மதிப்பில் இருமடங்கு வர்த்தகம் மேற்கொள்ளவேண்டும்.அடுத்தடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 10 சதவீதம் வர்த்தகம் மேற்கொள்ளவேண்டும்.வரைவு அறிக்கையின்படி கணக்கிட்டால் 5 ஆண்டுகளில், எந்திரத்திற்கான முதலீட்டில் நிறுவனங்கள் 60 சதவீத தொகையை மானியமாக பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 1 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரையிலான எந்திரம் முதலீடுகளுக்கும், பெரிய நிறுவனங்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.நூற்பாலை, நெசவு, பின்னலாடை உற்பத்தி, நிட்டிங், பிராசசிங் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் என அனைத்து துறையினரும் இந்த திட்டத்தில் எந்திர முதலீடுகளுக்கு ஊக்கத்தொகை பெறமுடியும்.

    ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கான எந்திர முதலீடுகளுக்கும் புதிய திட்டத்தில் மானிய ஊக்கத்தொகை கிடைக்கும். ஜாப்ஒர்க் ரசீதுகள் விற்பனையாக எடுத்துக்கொள்ளப்படும்.தற்போதுவரை புதிய திட்டம் வரைவு நிலையில் மட்டுமே உள்ளது. ஜவுளித்துறையினர் தங்கள் கருத்துகளை வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதிக்குள் புதிய திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    ×