என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழில் அதிபர் பலி"
- பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி, மகளை அைழத்து கொண்டு சென்றார்.
- பிரகாஷ் சாலையோரம் இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
கோவை,
கோவை காரமடையை பெரியார் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). இவர் பன்றி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி (36). இவர்களது மகள் ரித்திகா (11).
சம்பவத்தன்று பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி, மகளை அைழத்து கொண்டு காரனூரில் இருந்து அக்கரை செங்கப்பள்ளி ரோட்டில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்தனர்.
இதில் பிரகாஷ் சாலையோரம் இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் பிரகாசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி-மகள் கண்முன்னே தொழில் அதிபர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (73). இவரது மனைவி சாந்தி (64). சம்பவத்தன்று இவர்கள் காரில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி ரோட்டில் வந்தனர். காரை சாந்தி ஓட்டினார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது மோதியது.இதில் ஆனந்த்ராஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்