என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "businessman died"
- பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி, மகளை அைழத்து கொண்டு சென்றார்.
- பிரகாஷ் சாலையோரம் இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
கோவை,
கோவை காரமடையை பெரியார் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). இவர் பன்றி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி (36). இவர்களது மகள் ரித்திகா (11).
சம்பவத்தன்று பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி, மகளை அைழத்து கொண்டு காரனூரில் இருந்து அக்கரை செங்கப்பள்ளி ரோட்டில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்தனர்.
இதில் பிரகாஷ் சாலையோரம் இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் பிரகாசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி-மகள் கண்முன்னே தொழில் அதிபர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (73). இவரது மனைவி சாந்தி (64). சம்பவத்தன்று இவர்கள் காரில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி ரோட்டில் வந்தனர். காரை சாந்தி ஓட்டினார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது மோதியது.இதில் ஆனந்த்ராஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெட்டியார் பாளையத்தில் சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலதிபர் பலியானார்
- இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.
புதுச்சேரி:
ரெட்டியார் பாளையத்தில் சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலதிபர் பலியானார்.
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியை அடுத்த கீழ்அக்ரகாரம் பி.கே.வி. நகரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இவரது மகன் தமிழ்செல்வன்(வயது41). இவர் பங்கூர் பகுதியில் எந்திரங்களுக்கு கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளன.
இந்த நிலையில் தமிழ்செல்வனின் நண்பர் பிரான்சில் இருந்து புதுவை வந்திருந்தார். இதையடுத்து நண்பரின் அழைப்பை ஏற்று தமிழ்செல்வன் நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் புதுவை வந்தார். பின்னர் நண்பரை சந்தித்து பேசி விட்டு வீட்டுக்கு புறப்பட்டு வந்தார்.
ரெட்டியார் பாளை யத்தில் ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வன் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக் காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்செல்வம் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தந்தை தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்