search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் மின்வெட்டு"

    • தொடர் மின்வெட்டு காரணமாக மின் பொறியாளர் அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
    • இது குறித்து மூங்கில் துறைப்பட்டு பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில் துறைப் பட்டு பகுதியை சுற்றி யுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், வணிகர்கள், சிறுகுறு தொழில் செய்யும் வியாபாரி கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். எனினும் திருவண்ணா மலை மாவட்டம் பெருந்துறை பட்டில் இருந்து மூங்கில் துறைப்பட்டு பகுதிக்கு மின்சாரம் வினி யோகிப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    இது குறித்து மூங்கில் துறைப்பட்டு பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஏற்கனவே 2 முறை மூங்கில்துறைப்பட்டு இளம் மின் பொறியாளர் அலுவல கத்தில் போராட்ட மும் நடத்தியுள்ளனர். இருப்பி னும் சீரான மின்சாரம் வினி யோகம் செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது வரை அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் 3-வது முறையாக மூங்கில்துறைப்பட்டு இளம்மின் பொறியாளர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்ததும் மூங்கில் துறைப் பட்டு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்துபோக செய்தனர்.

    • போராட்டக்காரர்கள் நகரின் முக்கிய சாலைக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

    இஸ்லாமாபாத் :

    நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடுமையான மின்பாற்றக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் ஒரு நாளில் 12 முதல் 14 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக தெரிகிறது. இதனால் அந்த நகர மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    இந்த நிலையில் தொடர் மின்வெட்டு காரணமாக ஆத்திரமடைந்த கராச்சி நகர மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீர் போராட்டத்தில் குதித்தனர். நகரில் உள்ள முக்கிய சாலையில் குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் டயர்களை தீவைத்து கொளுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் மின்வெட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் மீண்டும் நகரின் முக்கிய சாலைக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×