search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Continuous power cut"

    • தொடர் மின்வெட்டு காரணமாக மின் பொறியாளர் அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
    • இது குறித்து மூங்கில் துறைப்பட்டு பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில் துறைப் பட்டு பகுதியை சுற்றி யுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், வணிகர்கள், சிறுகுறு தொழில் செய்யும் வியாபாரி கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். எனினும் திருவண்ணா மலை மாவட்டம் பெருந்துறை பட்டில் இருந்து மூங்கில் துறைப்பட்டு பகுதிக்கு மின்சாரம் வினி யோகிப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    இது குறித்து மூங்கில் துறைப்பட்டு பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஏற்கனவே 2 முறை மூங்கில்துறைப்பட்டு இளம் மின் பொறியாளர் அலுவல கத்தில் போராட்ட மும் நடத்தியுள்ளனர். இருப்பி னும் சீரான மின்சாரம் வினி யோகம் செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது வரை அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் 3-வது முறையாக மூங்கில்துறைப்பட்டு இளம்மின் பொறியாளர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்ததும் மூங்கில் துறைப் பட்டு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்துபோக செய்தனர்.

    ×